3.28.2012
ப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு
(ஐ, எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)

(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)

(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)

(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்?! ...,)

(நான் மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)

(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)

(நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)

(நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)

(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)

(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,)

(பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால் எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)

டிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா?
rajiyinkanavugal.blogspot.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக