ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

வியாழன், 12 ஜூலை, 2012

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?


புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்



இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...

27-Aug-2008

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

சர்வே சொல்லுது:

இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது.

கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம் ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

புற்றுநோயும் வரும்:

வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும் அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
-செந்தில்

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.

வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்:

* உங்கள் பெற்றோரின் நண்பர்கள், வீட்டருகில் வசிக்கும் நபர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் அவர்களிடம் பேசி உதவியை பெற முடியும்.

இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்:

* வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது அவர்களுக்கு கவலையை கொடுத்து, அந்த கவலை, மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். தனிமையாக உணர்வதால், அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்னை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோருக்காக, நீங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், அவர்களுடன் இரவு உணவை உண்ணுங்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்:

* ஆரோக்கியத்துடன் இருந்தும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனரா? வாக்கிங், யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்ட சொல்லுங்கள். உங்கள் பெற்றோரின் வீட்டருகில் வசிப்ப வராக இருந்தால், அவர்களை தினமும் வாக்கிங் அழைத்து செல்லுங்கள். அல்லது கடைக்கு செல்லும் போது அவர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் அனுப்பி வையுங்கள்.

பெற்றோர் கூறுவதை பொறுமையாக கேளுங்கள்:

* உங்கள் பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறும் போது அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் கூறுவதை கவனமாக, பொறுமையுடன் கேளுங்கள். அப்படி கேட்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் அவர்களுக்கு கீழ்படிவதாகவும், அவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவரா?

* இன்டர்நெட், இ-மெயில் பற்றி உங்கள் பெற்றோருக்கு தெரிந்திருந்தால், இ-மெயில் மூலமும் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம், உங்கள் பெற்றோருக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றிய வெப்சைட்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். உங்களால் முடிந்தால், உங்கள் பெற்றோர் வீட்டில், “பேக்ஸ் மிஷின்’ வையுங்கள். அதன் மூலம் சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், மற்றும் உங்கள் குழந்தைகள் வரைந்த படங்கள் முதலியவற்றை அனுப்பலாம். மேலும் அவர்கள், உடல் நலம் குறித்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அனுப்பலாம்.
-செந்தில்

24-Aug-2008

சர்க்கரை நோயாளிகளின் உறுப்புகளை காக்கும் "பிஞ்சு' முட்டைக்கோஸ்

நீங்கள் சர்க்கரை நோயாளியா?
இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. "பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள சில புரதச்சத்துக்கள், உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

20-Aug-2008

டென்ஷன் எதனால் ?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல் திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர் திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன் மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.

இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.

1. நெஞ்செரிச்சல் (Heartburn):

டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்:
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்:

கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்:
உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்:

டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்:
தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு:

சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :
அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது:

எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

- மருத்துவம்

19-Aug-2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது.

5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

- suthan

14-Aug-2008

அரேபிய வாழ்க்கை.....


அரேபிய வாழ்க்கை.....
பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!
கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!
பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்
வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்
"நானும் எழுதினேன்"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"
நன்றி : சேக் அப்துல்லாஹ்

13-Aug-2008

வெந்நீரின் பயன்கள்

வெந்நீரின் பயன்கள்

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.

உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்! வெந்நீரின் பயன்களை லிஸ்ட் போட்டு மாளாது...

என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

12-Aug-2008

1947 பிரிவினையில் ஒற்றுமை.

அன்புள்ள மகளுக்கு வாப்பா எழுதும் கடிதம்,

இங்கு அனைவரும் நலம். அது போல் அங்கு நீ அம்மிஜான் ,வாசீம், ஈசான், மற்றும் போஸ்ட்மேன், கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரின் நலமறிய ஆவல்.

ரஜாக்கிடம் உனது புகைப்படத்தை காண்பித்தேன் ரொம்ப வெட்க்கபட்டான். இன்னும் இரண்டு வாரங்களில் லன்டன் செல்கிறான். அதன் பிறகு லாகூர் வந்த பிறகு அவனையும் கூட்டிக்கொண்டு மதுரை வருவேன். பட்னாவிலிருந்து மோஹன்லான் பையாஜி உனக்காக ஒரு சால்வை அனுப்பிருந்தார். அதையும் கொண்டு வருகிறேன்.

அம்மி ஜான்னுக்கு சுகர் இப்பொழுது எப்படி இருக்கிறது இன்னும், அவர்களை காலையில் கோரிப்பாளையத்திலிருந்து கலக்டர் அலுவலகம் வரை நடக்க சொல், நாளை ஈசான் அண்ணா அங்கே வருவதாக மதுரை புறப்படுகிறார். அவரிடம் சால்வையையும் கொஞ்சம் நகைகளையும் கொடுத்து அனுப்புகிறேன்.

தோல் வியாபாரத்திற்க்கு காபூலிலிருந்து இரண்டு வியாபாரிகளை ஏஜென்டாக சேர்த்துள்ளேன். அல்லா அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். காந்தி லாகூரில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்பொழுது மதுரை கோவில் அரிஜன நுழைவை பற்றி பேசினார் ரொம்ம பெருமையாக இருந்தது. நமது குப்பு சாமி, சுப்பையா எல்லோரும் சென்றிருப்பார்கள். மினாட்சி அம்மையின் விக்ரகத்தை நேரில் தரிசித்திருப்பார்கள்.

மகளே இங்கு விடுதலை போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. லன்டனில் இருந்து மௌண்ட் பேட்டன் என்னும் புதிய கவர்னரை மகாராணி நியமித்துள்ளார்கள். அவர் நல்ல மனிதர் போல் தெரிகிறது. மகாராணியிடம் இந்திய மக்களின் எண்ணத்தை எடுத்து சொல்லி விரைவில் விடுதலை பெற ஆவன செய்வார் எனத்தெறிகிறது. எனக்கு இன்னும் மனம் வலிக்கிறது. பகத்சிங்கின் தூக்கு தண்டனையின் போது லாகூர் சிறைக்கு வெளியே நடந்த போரட்டத்தில் நானும் தான் இருந்தேன். என்ன செய்ய இத்தனை இந்தியர்கள் இருந்து தங்க மகனை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

இப்படிக்கு ஜமால் முகம்மது லாகூர் மேற்க்கு இந்தியா.

அன்புள்ள வாப்பா அவர்களுக்கு பாத்திமா எழுவது।

இங்கு அனைவரும் நலம் அப்பா ஈசான் அண்ணா நீங்கள் அனுப்பிய பொருள் அத்தனையும் கொடுத்தார். எல்லொரும் நலமாக இருக்கிறோம். வா ஊ சி அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அன்னிய உடமைகள் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். திருப்பூரில் குமரன் என்னும் இளைஞரை போலிசார் அடித்ததில் அவர் உயிரிழந்து விட்டார். அவர் தன் உயிர் போனாலும் பாரதக் கொடியை விடாமல் தன் இன்னுயிர் நீத்தார் தமிழகமெங்கும் அவரது பேச்சுதான் அப்பா, வடக்கே பகத்சிங் என்றால் இங்கே குமரன் போன்ற இளைஞர்கள், இவர்கள் இன்னுயிர் நீத்து வாங்கித்தரும் சுதந்திரம் மிகவும் விலையுயர்ந்தது அப்பா, அதனால் திருமணம் ஆனா பிறகு நான் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதலாம் என்றிருக்கிறேன். வரும் தலைமுறைகள் இதை கண்டு எதிர்காலத்தில் வரும் தலைமுறை சுதந்திரத்தை தக்க முறையில் பேணிகாக்க வேண்டும்.

பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரை இந்தியா.

அன்புள்ள மகள் பாத்திமா,

அனைவரும் நலமா இங்கு சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் ஆட்சி அதிகாரத்தை நமக்கு தந்து விடுவார்கள் போல் உள்ளது. ஆனால் ஒரு புதிய அதிர்ச்சி தரும் செய்தி ஜின்னா அவர்கள் முஸ்லீம்களுக்கா புதிய நாட்டை உருவாக்கித்தாருங்கள் என ஆங்கிலேயரிடம் சொல்கிறார். அதற்க்கு காந்திஜிக்கு உடன் பாடில்லை ஆனால் டில்லியில் இதற்க்கான வேலைகள் தயாராகிவருவதாக செய்திகள் வருகிறது. அப்படி முஸ்லீம்களுக்காக தனி நாடு உறுவாகிவிட்டால், நீ அம்மிஜானும்,வாசீம், ஈசான் எல்லோரும் புறப்பட்டு வந்துவிடுங்கள். இங்கு இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எனக்கு அங்கு வரவேண்டும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் தான் மனம் சொல்கிரது. முடிந்தவரை பார்க்கிறேன். இல்லையென்றால் புறப்பட்டு வந்து விடுகிறேன். அதிகமாக வெளியே எங்கும் சுத்த வேண்டாம். தம்பிகளிடம் சொல்லி வை

வாப்பா ஜமால் முகம்மது
லாகூர்

பிரியமுள்ள வாப்பாவுக்கு பாத்திமா எழுதுவது,

அப்பா பாரதம் இரண்டு துண்டாக ஆக்கப்படுவது முடிவாகிவிட்டது. வடக்கில் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்த்தான் செல்ல தயராகிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் அது முடியாத காரியமப்பா இங்கே அனைவரும் அண்ணன் தம்பிபோல் பழகிவிட்டோம். வாழ்ந்தாலும் இறந்தாலும் இங்கேயே என்பது முடிவாகிவிட்டது. மேலும் கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரும் இன்று வீட்டிற்க்கு வந்து அப்படி யாரும் போகும் சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் போக வேண்டாம் என்று சொன்னார்கள். திருப்பரங்குன்றத்தில் முகைதீன் மாமாவும் இதைத்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு வந்து விடுங்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கையில் பயமில்லை ஆனால். உங்களை நினைத்தால் தான் வாப்பா பயமாக இருக்கிறது. இந்த கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். தயவு செய்து நீங்கள் எந்த வேலை இருந்தாலும் விட்டு விட்டு வந்து விடுங்கள். இங்கு போஸ்ட்மேனை போலீஸ்காரர்கள் பிடித்து சென்று விட்டார்கள். அவர் பொதுக்கூட்டம் போட்ட காரணத்தால் அவரை கைது செய்து விட்டனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கடிதம் கண்ட உடன் புறப்பட்டு வரவும். அம்மிஜான் உங்கள் நினைவால் கவலைபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக்கு
மகள் பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரைஇந்தியா

11-Aug-2008

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?

அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள். முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு.

ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

தகவல்: ஒரு கணனி

10-Aug-2008

1947

கண்ணடம் கலந்த தமிழ் வாடை வீசும் கிராமம், தமிழகத்தின் எல்லை கிருஷ்னகிரி மாவட்டத்தின் வடகோடி வாகைகுடி கிராமாம்,
இந்த கிராமத்தை கடந்தால் அடுத்து வருவது கருநாடகதான் (கர்நாடகம்).

மதிய வெப்பம் தனிந்து மாலை குளிர் வர ஆரம்பிக்கிறது. மூன்று கூட்டு அடுக்கு மாட்டு வண்டியில் 20 வதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அறிவாலும் சூலமும் ஈட்டியும் ஏந்திக்கொண்டு வர ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்துவின் மகன் இதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தனது அப்பாவிடம் சொல்ல முத்துவும் ஊர்ப்பெரியவரான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று ஐயா மூன்று மாட்டு வண்டியில் ரொம்ப பேர் வராங்கையா கையில ஈட்டி அறிவால், சூலமெல்லாம் வைத்திருக்கின்றனர் சொன்னார்.

அதற்க்குள் மாட்டின் சலங்கை சத்தம் அருகில் கேட்க்க ஆரம்பித்தது. அதிலிருந்து ஆஜானுபவான ஒருவன் இறங்கினான். வடமொழியும் தமிழும் கலந்த கொச்சை மொழியில் பேச அதுபுரியாத குழந்தைவேலு அருகில் இருந்த சங்கரனிடம் தம்பி ஜோசப்பை கூட்டிவா இவன் என்ன சொல்கிறான் என்று புரிய வில்லை. என சொல்ல சிறிது நேரத்தில் ஜோசப் அங்கு வர அவரிடம் தம்பி இவன் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை கொஞ்சம் விளங்கவை உனக்குத்தான் வரமொழி தெரியுமே என சொல்ல அவனும் அவரிடம் வடமொழியில் பேசியவுடன் ஜோசப்பின் முகம் இருளத்துவங்கியது.

பதட்டத்துடன் குழந்தைவேலுவிடம் ஐயா நம்ம நாடு சுதந்திரம் இன்று இரவு ஆகப்போகிறதான், ஆனால் இந்துக்களுக்கு என்றும் முஸ்லீம்களுக்கு என்று ஆங்லேயர் பிரித்து விட்டனர். அதனால் இங்குள்ள முஸ்லீம்கள் எல்லாம் புதிதாக பிரியப்போகும் பாகிஸ்த்தான் என்னும் நாட்டிற்க்கு செல்லவேண்டும் அப்படி செல்ல மறுப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் , அதற்க்குத்தான் இவர்கள் வடக்கே இருந்து வந்திருக்கிறார்கள் என சொல்ல குழந்தை வேலுவின் உள்ளம் வேதனையுற்றது.

அதற்க்குள் இருட்ட ஆரபிக்க ஜோசப்பிடம் சரிப்பா இவ்வளவு தூரம் வந்திருக்காங்க என்ன சாப்பிட்டாங்களோ என்னவோ அதனால் அனைவரையும் எனது வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க சொல், காலையில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஜோசப்பும் இதை சொல்ல வந்த நபர்கள் அனைவரும் சரி யென்று சொல்ல, குழந்தை வேலுவிற்க்கு மனதிற்க்குள் பல கேள்விகள் இவர்களை இப்படியே விட்டால், இவர்கள் தமிழகத்திற்க்குள் ஊடுறுவி ரகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள், இவர்களை எதிர்க்க நம்மிடம் பலமுமில்லை என்ன செய்யாலாம் என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டிற்க்குள் நுழைந்தவர் தனது மனைவியிடம் தனம் ஒரு 30 பேருக்கு சாப்பாடு தயார் செய்ம்மா , என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று யோசனையில் மூழ்கினார்.

அவர் அந்த பகுதியில் உள்ள பல கல் குவாரிகளின் முதலாளி, மேலும் நாட்டு வைத்தியர் வேறு தனது அறையில் அமர்ந்து யோசித்துகொண்டிருக்கையில் காயமுற்றவர்களுக்காக தரப்படும் உடல் மரத்து போகச்செய்யும் மருந்து கண்ணில் பட அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவிற்க்கு வந்தவராக அந்த மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தவர், அதற்க்குள் அவரது மனைவி சமையல் எல்லாம் ஆக்கி தயார் செய்து விட தோட்டத்திற்க்கு போய் வாழையிலை கொண்டு என்று அவர்களுக்கு சொல்ல அவரதுமனைவியும் சரி என்று சொல்லி விட்டு தோட்டத்திற்க்கு செல்ல அங்கு இருந்த மோர் பானையை திறந்தவர், அனைத்து மருந்தையும் அதில் கொட்டி கலந்துவிட்டு மீண்டும் மருந்து சீசாவை தனது அறைக்கு சென்று வைத்துவிட்டார். அனைவரும் சாப்பிட்டு விட்டனர்.

தனது கையேலேயே அனைவருக்கும் மருந்து கலந்த மோரை குடிக்க கொடுத்தார். தனது மனைவியிடம் இவர்கள் வராந்தாவிலேயே தூங்கட்டும் நீங்கள் எல்லோரும் வீட்டில் போஉ தூங்குங்கள் என்று சொல்லி விட்டு கல்குவாரியை நோக்கி நடையை கட்டினார்.

வெடிபோட நாகர்கோவிலிருந்து குடும்பத்துடம் அங்கு வந்து தங்கியிருந்த குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். அவர் தூரத்தில் வருவதை பார்த்த குப்பன் ஓடிச்சென்று ஐயா என்னங்கையா இந்த இரவு நேரத்தில் நீங்க சொன்னா நான் வந்திருக்க மாட்டேனா என்றான். அதற்க்கு அவர் குப்பா எத்தனை குழிப்பா போட்டிருக்கிறாய் என்று வினவ ஐயா இன்னும் 4 மாதத்திற்க்கான 66 குழி போட்டு விட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு குழி வெடிவைத்தாலும் இன்னும் 6 மாதத்திற்க்கு குழி போட தேவையில்லை ஐயா என்றவனை அமைதியாக பார்த்து எல்லா குழிக்குமே இன்று வெடிவைக்க முடியுமா என்றார், அவரது பேச்சைகேட்டு அதிர்ந்து போன குப்பன் ஐயா என்ன சொல்ரீங்க அப்படி போட்டா மலையே கானாமல் போய்விடும் ஐயா அப்புரம் ஊருக்குள் கல்விழும் என்றான்.

அதற்க்கு அவர் குப்பா இன்று இரவு இந்தியா சுதந்திரம் ஆகப்போகிரது அதனால் இந்த சந்தோச செய்தி சேலம் வரைக்கும் கேட்பது போல் வெடி போடனும் என்றார். குழம்பி போயிருந்த குப்பனை பார்த்து உன்னால் முடியுமா முடியாதா எனக்கு இன்று 66 குழியிலும் வெடிவைத்தாக வேண்டும் என்றார். அவனும் என்னங்கையா இப்படி சொல்ரீங்க உங்க உப்பை தின்று வளர்ந்த உடம்பு உங்களின் கட்டளையை ஏற்க்க மறுத்தால் எங்க பரம்பரைக்கே சோறுகிடைக்காது. சரிங்கையா நீங்க சொல்வது போல் இன்று இரவே அனைத்து குழியிலும் வெடி வைத்து விடுகிறென் என்று சென்னவன். வெடிமருந்து மூட்டையையும் ஹரிகேன் விளக்கையும் எடுத்து கொண்டு வெடிவைக்க கிளம்பிவிட்டான்.

மீண்டும் ஊருக்கு வந்தவர் மணியை பார்த்தார் மணி ஒன்பதை கடந்து விட்டது. வடக்கிலிருந்து வந்த அனைவரும் உடல் மரத்து போய் அங்காங்கே படுத்து கிடக்க பக்கத்தில் உள்ள சுந்தரத்தேவரையும் கனிநாடாரையும் வீடிற்க்கு சென்று அழைத்தார். இருவரும் என்னங்கையா இந்த ராத்திரியில் என்று கேட்க்க வடக்க இருந்து ஒரு முப்பது பேர் விருந்துக்கு வந்தாங்கே குடித்துவிட்டு கண்மண் தெரியாம தூங்கிறாங்க பெண்டு பிள்ளைங்க இருக்கிற இடம் அதனால் இவங்களை கொஞ்சம் ஊர் கடைசியில் இருக்கும் மலைக்கு அடிவாரத்தில் தூங்க வைக்கலாம் காலையில் அங்கேயே கல்கிடங்கில் குளித்துவிட்டு பிறகு ஊருக்கு வரட்டும் குடிகார பசங்க என்றார். அவர்களும் சரி என்று சொல்லி விட்டு ஒருவர் ஒருவராக மயங்கிகிடந்த அனைவரையும் தூக்கி மலை அடிவாரத்தில் போட்டு விட சரிப்பா எல்லோரும் போய்த்தூங்குங்க

மன்னித்துக்கொள்ளுங்கள் உங்க தூக்கத்தை கெடுத்து விட்டேன் என்று சொல்ல அவர்களும் பரவாயில்லை ஐயா என சொல்லி விட்டு மீண்டும் வீடு பொய் தூங்க சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது மணி 10 ஐ தாண்டிவிட்டது. ஊரே அயர்ந்து தூங்கி கொண்டிருக்க குழந்தை வேலுமட்டும் ஊர்த்தெருவில் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது துண்டை தண்ணீரில் நனைத்துக்கொண்டு முதலில் அன்சாரி வீட்டிற்க்கு சென்றார். அங்கு அன்சாரியும் அவரின் இரு பையன்களும் வீட்டு தின்னையில் நன்றாக உறக்கத்தில் இருந்தனர். சாமிகளா எங்களையும் இந்த மண்ணையும் விட்டு விட்டு சென்று எப்படி வாழ்வீர்கள்.

அப்படியே நீங்கள் சென்றாலும் நீங்க எங்கோ ஒரு தேசத்தில் கஸ்டப்படுவதை கண்டு எங்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் , வேண்டாம் நீங்கள் எங்களை விட்டு எங்கும் செல்ல கூடாது. நான் செய்யும் காரியம் தவறாக பட்டாலும் எனக்கு இதை தவிர ஒன்றும் தொனவில்லை கண்ணுகளா என்று மனதிற்க்குள் சொல்லி விட்டு துண்டை அவர்களின் முகத்தை நோக்கி உதர நீர்த்துளிகள் கண்ணில் பட்டது.

அன்சார் பட்டென்று எழுந்த உடன் குழந்தைவேலு பாய் மழைத்தூறல் எடுக்குது ஆலங்கட்டி மழை வரும் போல் இருக்கிறது. அதனால் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் போய்த்தூங்குக என்ற உடன் தூக்க கலக்கத்தில் இருந்த அன்சாரியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்ல இதே காரனத்தைசொல்லி தின்னையில் படுத்திருந்த அனைவரையும் வீட்டில் போய் படுக்கச்சொல்லிவிட்டு ஊரில் இருந்த அனைத்து வீட்டில் கதவுகளை வெளிப்புரமாக தாழ் போட்டார்.

நேரம் சரியாக 11:30 ஆகியிருந்தது. அந்த கும்மிருட்டிலும் லாந்தர் விளைக்கினை எடுத்துக்கொண்டு வேகவேக மாக குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். என்னப்பா ஆயிடுச்சா என்றார், அவனும் ஆமாங்கையா எல்லா குழியிலும் மருந்து வைத்துவிட்டேன். 10 குழிக்கு ஒரு குழி எர்த் அதனால் 6 குழி மருந்து பலமா இருக்கும் ஐயா ஆனா இப்படி ஒரு வேலையை நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை, எனக்கும் மனதில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்றான்.

அவரும் சரி உன் மனைவியையும் குழந்தையும் என்னுடன் அனுப்பிவிடு நீ கல்லு குகைக்கு போ சரியா 12 மணி க்கு நான் சங்கு ஊதுவேன் அந்த சத்தம் கேட்டதும் நீ வெடி வைக்க ஆரம்பி சரியா. என சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் அவனது குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு வீட்டிற்க்கு வந்து விட்டார்.

வரும் வழியில் யாரும் வெளியில் படுத்திருக்கிறார்களா?என்று நோட்டமிட்டவாரே, வீடு வந்து சேர்ந்தவர், தனது மனைவியை எழுப்பி குப்பனின் மனைவிக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை என சொல்லிவிட்டு கதவை தாழிட்டுவிட்டு மாடியறைக்கு வந்தவர் தூரத்தில் குப்பனின் ஹரிக்கேன் விளக்கு ஒளி புள்ளியாய் தெரிய, மலைக்கு இந்த பகுதியில் அந்த மனிதர்கள் படுத்திருப்பது கும்மிருட்டில் குப்பனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு காங்கேயத்தில் சுதந்திரம் பெற்றதற்க்கான அறிகுறியாய் வான வேடிக்கை சத்த்ம் லேசாய் கேட்க்க, தனது கைகளில் சங்கை எடுத்து மூச்சை உள்ளிழுத்து முழக்க மிட ஆரம்பித்தார்.

முதலில் மெல்ல எழுந்த சங்கின் ஒலி அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வேகமாக முழங்க, சங்கின் சத்ததை கேட்ட குப்பன் கையிலிருந்த ஜெர்மன் தயாரிப்பு பட்டிக்ஸன் பேட்டியில் இருந்த சாவியை திருக முதலில் கிழக்கே முகமாக வைத்த வெடி வெடிக்க அடுத்து பூகம்பம் வந்தது போல் பூமி அதிர்ந்தது.

ஒட்டு மொத்த வெடியும் ஒரே நேரத்தில் வெடிக்க, ஊரில் உள்ள வீடுகளின் ஓடுகளின் மீது கற்கள் பறந்து வந்து தாக்க, அன்சாரியின் மனைவி பயந்து போய் என்னங்க என்ன ஆச்சுன்னு போய் பாருங்க என சொல்ல அதற்க்கு அன்சாரி பாயோ ஆலங்கட்டி மழை பெய்கிறது, அதான் இப்படி சத்தம் சத்தம் கெட்டாமல் படுடி என தூக்கத்தில் சொல்லிவிட்டு தூங்க, கிட்டத்தட்ட அறைமணிநேரம் கழிந்த உடன்குழந்தைவேலு கீழே வந்து கதவை திறந்து பார்க்கிறார்,

ஒரே புகை மண்டலம் அந்த புகையிலும் அனைத்து வீட்டு கதவையும் மீண்டு சென்று தாழைவிலக்கி விட்டு குப்பா என குரல் கொடுக்க கல் குகைக்குள் இருந்து வெளிவந்த குப்பன் ஐயா சுதந்திரம் வந்துவிட்டதாய்யா என கேட்க்க ஆமாம் குப்பா இப்பதான் உன்மையான சுதந்திரம் வந்தது சொல்லி விட்டு சரி வா வீட்டிற்க்கு மற்றதை காலையில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு, பாதையில் கிடந்த கற்கள் இடர மனதில் இருந்த ஒரு இடரல் விலகியதால் இந்த இடரலை பொருட்படுத்தாமல் வீட்டிற்க்கு வந்தவர். நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.

1947 ஆகஸ்ட் 15 காலை பொழுது சேவல் கூவியது. வாசல் தெளிக்க வெளியே வந்த தனம் அம்மாள் ஒரே ஆச்சர்யத்தில் மூழ்கினார் கிழக்கே தெருவெல்லாம் ஒரே கல்லும் மண்ணும் புரியாமல் விழித்தவர், மெல்ல பொழுது புலர்வதை கண்டு வடக்கே பார்வையை செலுத்தியவர் அரண்டு போனார், திருமணமாகி வந்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடக்கே அந்த மலையைதான் முதலில் பார்ப்பவர், இன்று அந்த மலை இருந்த இடம் தெரியாமல் போனது. என்னங்க என்ன ஆச்சு ராவிலே மலையை காணோம் என சொல்ல, அவரும் பதட்டமின்றி மாடியேறிவடக்கே பார்வையை செலுத்தியவர். அவரின் எண்ணப்படி நடந்திருந்தது.

வடக்கையும் தெற்க்கையும் இனைக்கும் ஒரே பாதை அடைபட்டு கிடந்தது. அந்த குன்று சுத்தமாக இருந்த இடமின்றி போயிருந்தது. ஆனால் அந்த கல் கிடங்கும் நேற்று வந்தவர்கள் படுத்திருந்த இடமும் பல நூறு அடி மணல் குன்றின் கற்ப்பத்தில் சென்று விட்டது.

அன்று ஊரில் எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, குப்பனையும் அவனது குடும்பத்தினருக்கும் நிறைய சன்மானம் கொடுத்து காலையிலேயே அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டார் வேலு.

ஜோசப்பிடம் வந்தவர்கள் பாதிராத்திரியில் எழுந்து போட்டாங்க காவாலிபயலுக சொல்லிட்டாவது போகலாமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் அன்சாரி எந்த ஒரு சலமின்றி தனது ஆட்டு மந்தைகளை புதிய இடம் தேடி மேய்க்க அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

07-Aug-2008

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம். பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட் மூலமாகவே தீர்த்துக் கொள்ளும் வகையில், புதிய வெப்சைட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுதா பவுண்டேஷன் அமைப்பின் இந்த வெப்சைட்டில், பேஷன்ட்களின் கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்.

http://www.careultimate.com/ என்ற இந்த புதிய வெப்சைட்டில் கேன்சர் பற்றிய முழுதகவல்களும், உலக அளவில் கேன்சர் சிகிச்சை பற்றிய லேட்டஸ்ட் விவரங்களும் கிடைக்கும். இதில் கேள்விக்கு பதில் அளிக்கும் வசதி உள்ளது.

நோய் குறித்த சிகிச்சை, இரண்டாவது டாக்டரின் கருத்து ஆகியவற்றை கேட்கலாம். கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதில் அளிப்பார்கள். சிகிச்சையால் பலனடைந்த நோயாளிகளுடனும் கலந்துரையாட முடியும்.

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு லட்சம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை 40 சதவீதம் குறைந்த விலையில் வாங்கி விற்க எல்காட் நிறுவனம் முன் வந்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ.29,429 மற்றும் ரூ.31,717 ஆகிய இரண்டு விலைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக கடந்த மாதம் எல்லா கலெக்டர் அலுவலகங்கள், சென்னையில் உள்ள எல்காட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் ராணுவத்தினரும் கம்ப்யூட்டர் பெறலாம் என்று எல்காட் நிறுவனம் அறிவித்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெறுபவர்கள் ஆன்லைனில் www.elcot.in என்ற இனயதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதற்காக ஜூலை 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து லேப்டாப் கம்ப்யூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

06-Aug-2008

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? - பாகம் 2

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை.
முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது.


அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது.

அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள்.

சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று, வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள்.

கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம்.

வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம்.

நம்முடைய உடல் இங்கு இருக்கும் ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும்.

தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார்.

அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.

விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.

மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும். உலகத்தில், வளைகுடா நாடானது சர்க்கரை வியாதிகள் பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற அறிக்கையினை துபையிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையானது வெளியிட்டு இருந்தது.

வளைகுடாவில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வளைகுடாவில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.

விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே, பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.

பச்சைக் காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ள பலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன.

நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வளைகுடாவாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும். செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும் போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.

விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில்.

படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது?

வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு, சம்பளத்தினைச் சரியாக கொடுப்பது இல்லை. ஆறு மாதமோ ஏழு மாதமோ சம்பளம் கொடுக்காமல் இழுத்து அடிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதியினையும் செய்வதில்லை என்ற புகாரும் வருவதாக வளைகுடா பத்திரிகைகள் நமக்கு தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் பல அடிப்படை தொழிலாளர்களுக்கு ஊரில் பேசப்பட்ட சம்பளத்தொகையும் இங்கு வந்தபின் கொடுக்கப் படும் சம்பளத்தொகையும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும்.

அந்தக் குறைந்த சம்பளமும் பல மாதங்கள் கிடைக்காத இக்கட்டான சூழலில், குடும்பப் பசியைத் தீர்ப்பதற்காக வளைகுடாவுக்கு வந்தவர்கள், தன் பசிக்கு உணவு தேடிக் கொள்ள வேறு நிறுவனத்திடம் அவர்கள் ஓடிப்போய் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை என்று எதுவும் கையில் இருக்காது. ஆனால் தைரியமாக வேறு நிறுவனத்திடம் போய் வேலை செய்வார்கள். அங்கும் இதுபோல் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தகாத குற்றச் செயல்களில் ஈடுப்படுகிறார்கள்.

அண்மைக் காலமாக துபையிலும் மற்றும் உள்ள வளைகுடா நாடுகளிலும் பல குற்றங்களும் தகாத சம்பவங்களும் நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.
இதனைக் கருத்தில் கொண்ட துபைய் அரசாங்கமானது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்று ஆய்வு செய்து, அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்த நிறுவனத்திலிருந்து 'ஓடிப் போய்' வேலை செய்பவர்கள் என்று அறிக்கையினை வெளியிட்டது. ஆகையால், 'ஓடிப் போனவர்கள்' உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கையினை ஓடிப் போன தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக எடுக்கப்படும் என்ற அரசு அறிக்கை வெளியானவுடன் 'ஓடிப் போன' பலர் தாயகம் திரும்பி விட்டனர்.

23.9.2007 தேதிவரை துபையில் 152,375 'ஓடிப் போன' தொழிலாளர்களுக்கு அவுட்பாஸ் கொடுத்து உள்ளனர். ஒரு சில தொண்டு நிறுவனங்களும் துபையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் தாய் நாடு திரும்பி செல்வதற்கு ஏதுவாகச் சில விமானங்களை வாடகைக்கு எடுத்து அந்தத் தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்.

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.

கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில்.

என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு.

சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

ஆக்கம்: அபூ ஆஃப்ரீன் முத்துப்பேட்டை

04-Aug-2008

புற்று நோய்க்கு இலவச சிகிச்சை

இப்போதெல்லாம் புற்றுநோய் பணக்காரர்களின் வியாதி அல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏழைகளும் பல்வேறு விதமான புற்று நோயால் அவதிப்படுகிறார்கள்.

சிகிச்சை, மருத்துவமனை செலவு என தவிக்கும் அவர்களுக்கு சென்னையில் இருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

இதன் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி. இந்த ட்ரஸ்ட், டாக்டர் சாந்தா வின் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ட்ரஸ்ட் ஏழை புற்று நோயாளிகளை முழுமையாகப் பாதுகாக்கிறதா?

ஆம். முழுமையாக. ஏழை புற்றுநோயாளிகள் எந்த ஊரில் இருந்து வந்தாலும் சரி, சிகிச்சை முடியும் வரை இங்கு முழுக்க முழுக்க இலவசமாகத் தங்கி இருக்க முடியும்.

காபி, சிற்றுண்டி, மதிய - இரவு உணவு, மாலை நேர பால் என்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

ஏழைகளைக் காக்க இறைவன் எங்காவது இருந்து கொண்டுதான் இருக்கிறான்.

-குமுதம்

03-Aug-2008

பள்ளி மாணவர்களுக்கென புதிய இணையதளம் துவக்கம்


ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீசரண் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள் ளோம்.
இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்கு மற்றும் உயிரியல் பாடங்களும் கற்றுத் தரப்படும்.
சிபிஎஸ்சி மற்றும் மாநில அரசின் பாடத்திட்டங்கள் இதில் பின்பற்றப்படும். மாதிரித் தேர்வுகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
இதற்கு ஆண்டுக்கு ரூ.1040 கட்டணம் பெறப்படும். சிடி வடிவிலும் மாணவர்கள் இதனைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த இணைய தள சேவை வழங்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டும் 2 லட்சம் மாணவர்கள் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?


புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்



இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...

27-Aug-2008

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

சர்வே சொல்லுது:

இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது.

கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம் ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

புற்றுநோயும் வரும்:

வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும் அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
-செந்தில்

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.

வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்:

* உங்கள் பெற்றோரின் நண்பர்கள், வீட்டருகில் வசிக்கும் நபர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் அவர்களிடம் பேசி உதவியை பெற முடியும்.

இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்:

* வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது அவர்களுக்கு கவலையை கொடுத்து, அந்த கவலை, மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். தனிமையாக உணர்வதால், அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்னை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோருக்காக, நீங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், அவர்களுடன் இரவு உணவை உண்ணுங்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்:

* ஆரோக்கியத்துடன் இருந்தும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனரா? வாக்கிங், யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்ட சொல்லுங்கள். உங்கள் பெற்றோரின் வீட்டருகில் வசிப்ப வராக இருந்தால், அவர்களை தினமும் வாக்கிங் அழைத்து செல்லுங்கள். அல்லது கடைக்கு செல்லும் போது அவர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் அனுப்பி வையுங்கள்.

பெற்றோர் கூறுவதை பொறுமையாக கேளுங்கள்:

* உங்கள் பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறும் போது அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் கூறுவதை கவனமாக, பொறுமையுடன் கேளுங்கள். அப்படி கேட்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் அவர்களுக்கு கீழ்படிவதாகவும், அவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவரா?

* இன்டர்நெட், இ-மெயில் பற்றி உங்கள் பெற்றோருக்கு தெரிந்திருந்தால், இ-மெயில் மூலமும் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம், உங்கள் பெற்றோருக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றிய வெப்சைட்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். உங்களால் முடிந்தால், உங்கள் பெற்றோர் வீட்டில், “பேக்ஸ் மிஷின்’ வையுங்கள். அதன் மூலம் சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், மற்றும் உங்கள் குழந்தைகள் வரைந்த படங்கள் முதலியவற்றை அனுப்பலாம். மேலும் அவர்கள், உடல் நலம் குறித்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அனுப்பலாம்.
-செந்தில்

24-Aug-2008

சர்க்கரை நோயாளிகளின் உறுப்புகளை காக்கும் "பிஞ்சு' முட்டைக்கோஸ்

நீங்கள் சர்க்கரை நோயாளியா?
இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. "பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள சில புரதச்சத்துக்கள், உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

20-Aug-2008

டென்ஷன் எதனால் ?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல் திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர் திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன் மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.

இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.

1. நெஞ்செரிச்சல் (Heartburn):

டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்:
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்:

கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்:
உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்:

டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்:
தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு:

சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :
அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது:

எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

- மருத்துவம்

19-Aug-2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது.

5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

- suthan

14-Aug-2008

அரேபிய வாழ்க்கை.....


அரேபிய வாழ்க்கை.....
பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!
கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!
பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்
வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்
"நானும் எழுதினேன்"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"
நன்றி : சேக் அப்துல்லாஹ்

13-Aug-2008

வெந்நீரின் பயன்கள்

வெந்நீரின் பயன்கள்

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.

உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்! வெந்நீரின் பயன்களை லிஸ்ட் போட்டு மாளாது...

என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

12-Aug-2008

1947 பிரிவினையில் ஒற்றுமை.

அன்புள்ள மகளுக்கு வாப்பா எழுதும் கடிதம்,

இங்கு அனைவரும் நலம். அது போல் அங்கு நீ அம்மிஜான் ,வாசீம், ஈசான், மற்றும் போஸ்ட்மேன், கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரின் நலமறிய ஆவல்.

ரஜாக்கிடம் உனது புகைப்படத்தை காண்பித்தேன் ரொம்ப வெட்க்கபட்டான். இன்னும் இரண்டு வாரங்களில் லன்டன் செல்கிறான். அதன் பிறகு லாகூர் வந்த பிறகு அவனையும் கூட்டிக்கொண்டு மதுரை வருவேன். பட்னாவிலிருந்து மோஹன்லான் பையாஜி உனக்காக ஒரு சால்வை அனுப்பிருந்தார். அதையும் கொண்டு வருகிறேன்.

அம்மி ஜான்னுக்கு சுகர் இப்பொழுது எப்படி இருக்கிறது இன்னும், அவர்களை காலையில் கோரிப்பாளையத்திலிருந்து கலக்டர் அலுவலகம் வரை நடக்க சொல், நாளை ஈசான் அண்ணா அங்கே வருவதாக மதுரை புறப்படுகிறார். அவரிடம் சால்வையையும் கொஞ்சம் நகைகளையும் கொடுத்து அனுப்புகிறேன்.

தோல் வியாபாரத்திற்க்கு காபூலிலிருந்து இரண்டு வியாபாரிகளை ஏஜென்டாக சேர்த்துள்ளேன். அல்லா அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். காந்தி லாகூரில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்பொழுது மதுரை கோவில் அரிஜன நுழைவை பற்றி பேசினார் ரொம்ம பெருமையாக இருந்தது. நமது குப்பு சாமி, சுப்பையா எல்லோரும் சென்றிருப்பார்கள். மினாட்சி அம்மையின் விக்ரகத்தை நேரில் தரிசித்திருப்பார்கள்.

மகளே இங்கு விடுதலை போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. லன்டனில் இருந்து மௌண்ட் பேட்டன் என்னும் புதிய கவர்னரை மகாராணி நியமித்துள்ளார்கள். அவர் நல்ல மனிதர் போல் தெரிகிறது. மகாராணியிடம் இந்திய மக்களின் எண்ணத்தை எடுத்து சொல்லி விரைவில் விடுதலை பெற ஆவன செய்வார் எனத்தெறிகிறது. எனக்கு இன்னும் மனம் வலிக்கிறது. பகத்சிங்கின் தூக்கு தண்டனையின் போது லாகூர் சிறைக்கு வெளியே நடந்த போரட்டத்தில் நானும் தான் இருந்தேன். என்ன செய்ய இத்தனை இந்தியர்கள் இருந்து தங்க மகனை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

இப்படிக்கு ஜமால் முகம்மது லாகூர் மேற்க்கு இந்தியா.

அன்புள்ள வாப்பா அவர்களுக்கு பாத்திமா எழுவது।

இங்கு அனைவரும் நலம் அப்பா ஈசான் அண்ணா நீங்கள் அனுப்பிய பொருள் அத்தனையும் கொடுத்தார். எல்லொரும் நலமாக இருக்கிறோம். வா ஊ சி அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அன்னிய உடமைகள் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். திருப்பூரில் குமரன் என்னும் இளைஞரை போலிசார் அடித்ததில் அவர் உயிரிழந்து விட்டார். அவர் தன் உயிர் போனாலும் பாரதக் கொடியை விடாமல் தன் இன்னுயிர் நீத்தார் தமிழகமெங்கும் அவரது பேச்சுதான் அப்பா, வடக்கே பகத்சிங் என்றால் இங்கே குமரன் போன்ற இளைஞர்கள், இவர்கள் இன்னுயிர் நீத்து வாங்கித்தரும் சுதந்திரம் மிகவும் விலையுயர்ந்தது அப்பா, அதனால் திருமணம் ஆனா பிறகு நான் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதலாம் என்றிருக்கிறேன். வரும் தலைமுறைகள் இதை கண்டு எதிர்காலத்தில் வரும் தலைமுறை சுதந்திரத்தை தக்க முறையில் பேணிகாக்க வேண்டும்.

பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரை இந்தியா.

அன்புள்ள மகள் பாத்திமா,

அனைவரும் நலமா இங்கு சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் ஆட்சி அதிகாரத்தை நமக்கு தந்து விடுவார்கள் போல் உள்ளது. ஆனால் ஒரு புதிய அதிர்ச்சி தரும் செய்தி ஜின்னா அவர்கள் முஸ்லீம்களுக்கா புதிய நாட்டை உருவாக்கித்தாருங்கள் என ஆங்கிலேயரிடம் சொல்கிறார். அதற்க்கு காந்திஜிக்கு உடன் பாடில்லை ஆனால் டில்லியில் இதற்க்கான வேலைகள் தயாராகிவருவதாக செய்திகள் வருகிறது. அப்படி முஸ்லீம்களுக்காக தனி நாடு உறுவாகிவிட்டால், நீ அம்மிஜானும்,வாசீம், ஈசான் எல்லோரும் புறப்பட்டு வந்துவிடுங்கள். இங்கு இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எனக்கு அங்கு வரவேண்டும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் தான் மனம் சொல்கிரது. முடிந்தவரை பார்க்கிறேன். இல்லையென்றால் புறப்பட்டு வந்து விடுகிறேன். அதிகமாக வெளியே எங்கும் சுத்த வேண்டாம். தம்பிகளிடம் சொல்லி வை

வாப்பா ஜமால் முகம்மது
லாகூர்

பிரியமுள்ள வாப்பாவுக்கு பாத்திமா எழுதுவது,

அப்பா பாரதம் இரண்டு துண்டாக ஆக்கப்படுவது முடிவாகிவிட்டது. வடக்கில் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்த்தான் செல்ல தயராகிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் அது முடியாத காரியமப்பா இங்கே அனைவரும் அண்ணன் தம்பிபோல் பழகிவிட்டோம். வாழ்ந்தாலும் இறந்தாலும் இங்கேயே என்பது முடிவாகிவிட்டது. மேலும் கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரும் இன்று வீட்டிற்க்கு வந்து அப்படி யாரும் போகும் சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் போக வேண்டாம் என்று சொன்னார்கள். திருப்பரங்குன்றத்தில் முகைதீன் மாமாவும் இதைத்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு வந்து விடுங்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கையில் பயமில்லை ஆனால். உங்களை நினைத்தால் தான் வாப்பா பயமாக இருக்கிறது. இந்த கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். தயவு செய்து நீங்கள் எந்த வேலை இருந்தாலும் விட்டு விட்டு வந்து விடுங்கள். இங்கு போஸ்ட்மேனை போலீஸ்காரர்கள் பிடித்து சென்று விட்டார்கள். அவர் பொதுக்கூட்டம் போட்ட காரணத்தால் அவரை கைது செய்து விட்டனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கடிதம் கண்ட உடன் புறப்பட்டு வரவும். அம்மிஜான் உங்கள் நினைவால் கவலைபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக்கு
மகள் பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரைஇந்தியா

11-Aug-2008

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?

அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள். முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு.

ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

தகவல்: ஒரு கணனி

10-Aug-2008

1947

கண்ணடம் கலந்த தமிழ் வாடை வீசும் கிராமம், தமிழகத்தின் எல்லை கிருஷ்னகிரி மாவட்டத்தின் வடகோடி வாகைகுடி கிராமாம்,
இந்த கிராமத்தை கடந்தால் அடுத்து வருவது கருநாடகதான் (கர்நாடகம்).

மதிய வெப்பம் தனிந்து மாலை குளிர் வர ஆரம்பிக்கிறது. மூன்று கூட்டு அடுக்கு மாட்டு வண்டியில் 20 வதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அறிவாலும் சூலமும் ஈட்டியும் ஏந்திக்கொண்டு வர ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்துவின் மகன் இதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தனது அப்பாவிடம் சொல்ல முத்துவும் ஊர்ப்பெரியவரான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று ஐயா மூன்று மாட்டு வண்டியில் ரொம்ப பேர் வராங்கையா கையில ஈட்டி அறிவால், சூலமெல்லாம் வைத்திருக்கின்றனர் சொன்னார்.

அதற்க்குள் மாட்டின் சலங்கை சத்தம் அருகில் கேட்க்க ஆரம்பித்தது. அதிலிருந்து ஆஜானுபவான ஒருவன் இறங்கினான். வடமொழியும் தமிழும் கலந்த கொச்சை மொழியில் பேச அதுபுரியாத குழந்தைவேலு அருகில் இருந்த சங்கரனிடம் தம்பி ஜோசப்பை கூட்டிவா இவன் என்ன சொல்கிறான் என்று புரிய வில்லை. என சொல்ல சிறிது நேரத்தில் ஜோசப் அங்கு வர அவரிடம் தம்பி இவன் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை கொஞ்சம் விளங்கவை உனக்குத்தான் வரமொழி தெரியுமே என சொல்ல அவனும் அவரிடம் வடமொழியில் பேசியவுடன் ஜோசப்பின் முகம் இருளத்துவங்கியது.

பதட்டத்துடன் குழந்தைவேலுவிடம் ஐயா நம்ம நாடு சுதந்திரம் இன்று இரவு ஆகப்போகிறதான், ஆனால் இந்துக்களுக்கு என்றும் முஸ்லீம்களுக்கு என்று ஆங்லேயர் பிரித்து விட்டனர். அதனால் இங்குள்ள முஸ்லீம்கள் எல்லாம் புதிதாக பிரியப்போகும் பாகிஸ்த்தான் என்னும் நாட்டிற்க்கு செல்லவேண்டும் அப்படி செல்ல மறுப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் , அதற்க்குத்தான் இவர்கள் வடக்கே இருந்து வந்திருக்கிறார்கள் என சொல்ல குழந்தை வேலுவின் உள்ளம் வேதனையுற்றது.

அதற்க்குள் இருட்ட ஆரபிக்க ஜோசப்பிடம் சரிப்பா இவ்வளவு தூரம் வந்திருக்காங்க என்ன சாப்பிட்டாங்களோ என்னவோ அதனால் அனைவரையும் எனது வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க சொல், காலையில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஜோசப்பும் இதை சொல்ல வந்த நபர்கள் அனைவரும் சரி யென்று சொல்ல, குழந்தை வேலுவிற்க்கு மனதிற்க்குள் பல கேள்விகள் இவர்களை இப்படியே விட்டால், இவர்கள் தமிழகத்திற்க்குள் ஊடுறுவி ரகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள், இவர்களை எதிர்க்க நம்மிடம் பலமுமில்லை என்ன செய்யாலாம் என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டிற்க்குள் நுழைந்தவர் தனது மனைவியிடம் தனம் ஒரு 30 பேருக்கு சாப்பாடு தயார் செய்ம்மா , என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று யோசனையில் மூழ்கினார்.

அவர் அந்த பகுதியில் உள்ள பல கல் குவாரிகளின் முதலாளி, மேலும் நாட்டு வைத்தியர் வேறு தனது அறையில் அமர்ந்து யோசித்துகொண்டிருக்கையில் காயமுற்றவர்களுக்காக தரப்படும் உடல் மரத்து போகச்செய்யும் மருந்து கண்ணில் பட அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவிற்க்கு வந்தவராக அந்த மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தவர், அதற்க்குள் அவரது மனைவி சமையல் எல்லாம் ஆக்கி தயார் செய்து விட தோட்டத்திற்க்கு போய் வாழையிலை கொண்டு என்று அவர்களுக்கு சொல்ல அவரதுமனைவியும் சரி என்று சொல்லி விட்டு தோட்டத்திற்க்கு செல்ல அங்கு இருந்த மோர் பானையை திறந்தவர், அனைத்து மருந்தையும் அதில் கொட்டி கலந்துவிட்டு மீண்டும் மருந்து சீசாவை தனது அறைக்கு சென்று வைத்துவிட்டார். அனைவரும் சாப்பிட்டு விட்டனர்.

தனது கையேலேயே அனைவருக்கும் மருந்து கலந்த மோரை குடிக்க கொடுத்தார். தனது மனைவியிடம் இவர்கள் வராந்தாவிலேயே தூங்கட்டும் நீங்கள் எல்லோரும் வீட்டில் போஉ தூங்குங்கள் என்று சொல்லி விட்டு கல்குவாரியை நோக்கி நடையை கட்டினார்.

வெடிபோட நாகர்கோவிலிருந்து குடும்பத்துடம் அங்கு வந்து தங்கியிருந்த குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். அவர் தூரத்தில் வருவதை பார்த்த குப்பன் ஓடிச்சென்று ஐயா என்னங்கையா இந்த இரவு நேரத்தில் நீங்க சொன்னா நான் வந்திருக்க மாட்டேனா என்றான். அதற்க்கு அவர் குப்பா எத்தனை குழிப்பா போட்டிருக்கிறாய் என்று வினவ ஐயா இன்னும் 4 மாதத்திற்க்கான 66 குழி போட்டு விட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு குழி வெடிவைத்தாலும் இன்னும் 6 மாதத்திற்க்கு குழி போட தேவையில்லை ஐயா என்றவனை அமைதியாக பார்த்து எல்லா குழிக்குமே இன்று வெடிவைக்க முடியுமா என்றார், அவரது பேச்சைகேட்டு அதிர்ந்து போன குப்பன் ஐயா என்ன சொல்ரீங்க அப்படி போட்டா மலையே கானாமல் போய்விடும் ஐயா அப்புரம் ஊருக்குள் கல்விழும் என்றான்.

அதற்க்கு அவர் குப்பா இன்று இரவு இந்தியா சுதந்திரம் ஆகப்போகிரது அதனால் இந்த சந்தோச செய்தி சேலம் வரைக்கும் கேட்பது போல் வெடி போடனும் என்றார். குழம்பி போயிருந்த குப்பனை பார்த்து உன்னால் முடியுமா முடியாதா எனக்கு இன்று 66 குழியிலும் வெடிவைத்தாக வேண்டும் என்றார். அவனும் என்னங்கையா இப்படி சொல்ரீங்க உங்க உப்பை தின்று வளர்ந்த உடம்பு உங்களின் கட்டளையை ஏற்க்க மறுத்தால் எங்க பரம்பரைக்கே சோறுகிடைக்காது. சரிங்கையா நீங்க சொல்வது போல் இன்று இரவே அனைத்து குழியிலும் வெடி வைத்து விடுகிறென் என்று சென்னவன். வெடிமருந்து மூட்டையையும் ஹரிகேன் விளக்கையும் எடுத்து கொண்டு வெடிவைக்க கிளம்பிவிட்டான்.

மீண்டும் ஊருக்கு வந்தவர் மணியை பார்த்தார் மணி ஒன்பதை கடந்து விட்டது. வடக்கிலிருந்து வந்த அனைவரும் உடல் மரத்து போய் அங்காங்கே படுத்து கிடக்க பக்கத்தில் உள்ள சுந்தரத்தேவரையும் கனிநாடாரையும் வீடிற்க்கு சென்று அழைத்தார். இருவரும் என்னங்கையா இந்த ராத்திரியில் என்று கேட்க்க வடக்க இருந்து ஒரு முப்பது பேர் விருந்துக்கு வந்தாங்கே குடித்துவிட்டு கண்மண் தெரியாம தூங்கிறாங்க பெண்டு பிள்ளைங்க இருக்கிற இடம் அதனால் இவங்களை கொஞ்சம் ஊர் கடைசியில் இருக்கும் மலைக்கு அடிவாரத்தில் தூங்க வைக்கலாம் காலையில் அங்கேயே கல்கிடங்கில் குளித்துவிட்டு பிறகு ஊருக்கு வரட்டும் குடிகார பசங்க என்றார். அவர்களும் சரி என்று சொல்லி விட்டு ஒருவர் ஒருவராக மயங்கிகிடந்த அனைவரையும் தூக்கி மலை அடிவாரத்தில் போட்டு விட சரிப்பா எல்லோரும் போய்த்தூங்குங்க

மன்னித்துக்கொள்ளுங்கள் உங்க தூக்கத்தை கெடுத்து விட்டேன் என்று சொல்ல அவர்களும் பரவாயில்லை ஐயா என சொல்லி விட்டு மீண்டும் வீடு பொய் தூங்க சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது மணி 10 ஐ தாண்டிவிட்டது. ஊரே அயர்ந்து தூங்கி கொண்டிருக்க குழந்தை வேலுமட்டும் ஊர்த்தெருவில் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது துண்டை தண்ணீரில் நனைத்துக்கொண்டு முதலில் அன்சாரி வீட்டிற்க்கு சென்றார். அங்கு அன்சாரியும் அவரின் இரு பையன்களும் வீட்டு தின்னையில் நன்றாக உறக்கத்தில் இருந்தனர். சாமிகளா எங்களையும் இந்த மண்ணையும் விட்டு விட்டு சென்று எப்படி வாழ்வீர்கள்.

அப்படியே நீங்கள் சென்றாலும் நீங்க எங்கோ ஒரு தேசத்தில் கஸ்டப்படுவதை கண்டு எங்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் , வேண்டாம் நீங்கள் எங்களை விட்டு எங்கும் செல்ல கூடாது. நான் செய்யும் காரியம் தவறாக பட்டாலும் எனக்கு இதை தவிர ஒன்றும் தொனவில்லை கண்ணுகளா என்று மனதிற்க்குள் சொல்லி விட்டு துண்டை அவர்களின் முகத்தை நோக்கி உதர நீர்த்துளிகள் கண்ணில் பட்டது.

அன்சார் பட்டென்று எழுந்த உடன் குழந்தைவேலு பாய் மழைத்தூறல் எடுக்குது ஆலங்கட்டி மழை வரும் போல் இருக்கிறது. அதனால் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் போய்த்தூங்குக என்ற உடன் தூக்க கலக்கத்தில் இருந்த அன்சாரியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்ல இதே காரனத்தைசொல்லி தின்னையில் படுத்திருந்த அனைவரையும் வீட்டில் போய் படுக்கச்சொல்லிவிட்டு ஊரில் இருந்த அனைத்து வீட்டில் கதவுகளை வெளிப்புரமாக தாழ் போட்டார்.

நேரம் சரியாக 11:30 ஆகியிருந்தது. அந்த கும்மிருட்டிலும் லாந்தர் விளைக்கினை எடுத்துக்கொண்டு வேகவேக மாக குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். என்னப்பா ஆயிடுச்சா என்றார், அவனும் ஆமாங்கையா எல்லா குழியிலும் மருந்து வைத்துவிட்டேன். 10 குழிக்கு ஒரு குழி எர்த் அதனால் 6 குழி மருந்து பலமா இருக்கும் ஐயா ஆனா இப்படி ஒரு வேலையை நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை, எனக்கும் மனதில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்றான்.

அவரும் சரி உன் மனைவியையும் குழந்தையும் என்னுடன் அனுப்பிவிடு நீ கல்லு குகைக்கு போ சரியா 12 மணி க்கு நான் சங்கு ஊதுவேன் அந்த சத்தம் கேட்டதும் நீ வெடி வைக்க ஆரம்பி சரியா. என சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் அவனது குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு வீட்டிற்க்கு வந்து விட்டார்.

வரும் வழியில் யாரும் வெளியில் படுத்திருக்கிறார்களா?என்று நோட்டமிட்டவாரே, வீடு வந்து சேர்ந்தவர், தனது மனைவியை எழுப்பி குப்பனின் மனைவிக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை என சொல்லிவிட்டு கதவை தாழிட்டுவிட்டு மாடியறைக்கு வந்தவர் தூரத்தில் குப்பனின் ஹரிக்கேன் விளக்கு ஒளி புள்ளியாய் தெரிய, மலைக்கு இந்த பகுதியில் அந்த மனிதர்கள் படுத்திருப்பது கும்மிருட்டில் குப்பனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு காங்கேயத்தில் சுதந்திரம் பெற்றதற்க்கான அறிகுறியாய் வான வேடிக்கை சத்த்ம் லேசாய் கேட்க்க, தனது கைகளில் சங்கை எடுத்து மூச்சை உள்ளிழுத்து முழக்க மிட ஆரம்பித்தார்.

முதலில் மெல்ல எழுந்த சங்கின் ஒலி அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வேகமாக முழங்க, சங்கின் சத்ததை கேட்ட குப்பன் கையிலிருந்த ஜெர்மன் தயாரிப்பு பட்டிக்ஸன் பேட்டியில் இருந்த சாவியை திருக முதலில் கிழக்கே முகமாக வைத்த வெடி வெடிக்க அடுத்து பூகம்பம் வந்தது போல் பூமி அதிர்ந்தது.

ஒட்டு மொத்த வெடியும் ஒரே நேரத்தில் வெடிக்க, ஊரில் உள்ள வீடுகளின் ஓடுகளின் மீது கற்கள் பறந்து வந்து தாக்க, அன்சாரியின் மனைவி பயந்து போய் என்னங்க என்ன ஆச்சுன்னு போய் பாருங்க என சொல்ல அதற்க்கு அன்சாரி பாயோ ஆலங்கட்டி மழை பெய்கிறது, அதான் இப்படி சத்தம் சத்தம் கெட்டாமல் படுடி என தூக்கத்தில் சொல்லிவிட்டு தூங்க, கிட்டத்தட்ட அறைமணிநேரம் கழிந்த உடன்குழந்தைவேலு கீழே வந்து கதவை திறந்து பார்க்கிறார்,

ஒரே புகை மண்டலம் அந்த புகையிலும் அனைத்து வீட்டு கதவையும் மீண்டு சென்று தாழைவிலக்கி விட்டு குப்பா என குரல் கொடுக்க கல் குகைக்குள் இருந்து வெளிவந்த குப்பன் ஐயா சுதந்திரம் வந்துவிட்டதாய்யா என கேட்க்க ஆமாம் குப்பா இப்பதான் உன்மையான சுதந்திரம் வந்தது சொல்லி விட்டு சரி வா வீட்டிற்க்கு மற்றதை காலையில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு, பாதையில் கிடந்த கற்கள் இடர மனதில் இருந்த ஒரு இடரல் விலகியதால் இந்த இடரலை பொருட்படுத்தாமல் வீட்டிற்க்கு வந்தவர். நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.

1947 ஆகஸ்ட் 15 காலை பொழுது சேவல் கூவியது. வாசல் தெளிக்க வெளியே வந்த தனம் அம்மாள் ஒரே ஆச்சர்யத்தில் மூழ்கினார் கிழக்கே தெருவெல்லாம் ஒரே கல்லும் மண்ணும் புரியாமல் விழித்தவர், மெல்ல பொழுது புலர்வதை கண்டு வடக்கே பார்வையை செலுத்தியவர் அரண்டு போனார், திருமணமாகி வந்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடக்கே அந்த மலையைதான் முதலில் பார்ப்பவர், இன்று அந்த மலை இருந்த இடம் தெரியாமல் போனது. என்னங்க என்ன ஆச்சு ராவிலே மலையை காணோம் என சொல்ல, அவரும் பதட்டமின்றி மாடியேறிவடக்கே பார்வையை செலுத்தியவர். அவரின் எண்ணப்படி நடந்திருந்தது.

வடக்கையும் தெற்க்கையும் இனைக்கும் ஒரே பாதை அடைபட்டு கிடந்தது. அந்த குன்று சுத்தமாக இருந்த இடமின்றி போயிருந்தது. ஆனால் அந்த கல் கிடங்கும் நேற்று வந்தவர்கள் படுத்திருந்த இடமும் பல நூறு அடி மணல் குன்றின் கற்ப்பத்தில் சென்று விட்டது.

அன்று ஊரில் எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, குப்பனையும் அவனது குடும்பத்தினருக்கும் நிறைய சன்மானம் கொடுத்து காலையிலேயே அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டார் வேலு.

ஜோசப்பிடம் வந்தவர்கள் பாதிராத்திரியில் எழுந்து போட்டாங்க காவாலிபயலுக சொல்லிட்டாவது போகலாமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் அன்சாரி எந்த ஒரு சலமின்றி தனது ஆட்டு மந்தைகளை புதிய இடம் தேடி மேய்க்க அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

07-Aug-2008

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம். பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட் மூலமாகவே தீர்த்துக் கொள்ளும் வகையில், புதிய வெப்சைட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுதா பவுண்டேஷன் அமைப்பின் இந்த வெப்சைட்டில், பேஷன்ட்களின் கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்.

http://www.careultimate.com/ என்ற இந்த புதிய வெப்சைட்டில் கேன்சர் பற்றிய முழுதகவல்களும், உலக அளவில் கேன்சர் சிகிச்சை பற்றிய லேட்டஸ்ட் விவரங்களும் கிடைக்கும். இதில் கேள்விக்கு பதில் அளிக்கும் வசதி உள்ளது.

நோய் குறித்த சிகிச்சை, இரண்டாவது டாக்டரின் கருத்து ஆகியவற்றை கேட்கலாம். கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதில் அளிப்பார்கள். சிகிச்சையால் பலனடைந்த நோயாளிகளுடனும் கலந்துரையாட முடியும்.

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு லட்சம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை 40 சதவீதம் குறைந்த விலையில் வாங்கி விற்க எல்காட் நிறுவனம் முன் வந்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ.29,429 மற்றும் ரூ.31,717 ஆகிய இரண்டு விலைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக கடந்த மாதம் எல்லா கலெக்டர் அலுவலகங்கள், சென்னையில் உள்ள எல்காட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் ராணுவத்தினரும் கம்ப்யூட்டர் பெறலாம் என்று எல்காட் நிறுவனம் அறிவித்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெறுபவர்கள் ஆன்லைனில் www.elcot.in என்ற இனயதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதற்காக ஜூலை 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து லேப்டாப் கம்ப்யூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

06-Aug-2008

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? - பாகம் 2

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை.
முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது.


அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது.

அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள்.

சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று, வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள்.

கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம்.

வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம்.

நம்முடைய உடல் இங்கு இருக்கும் ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும்.

தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார்.

அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.

விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.

மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும். உலகத்தில், வளைகுடா நாடானது சர்க்கரை வியாதிகள் பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற அறிக்கையினை துபையிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையானது வெளியிட்டு இருந்தது.

வளைகுடாவில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வளைகுடாவில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.

விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே, பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.

பச்சைக் காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ள பலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன.

நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வளைகுடாவாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும். செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும் போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.

விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில்.

படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது?

வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு, சம்பளத்தினைச் சரியாக கொடுப்பது இல்லை. ஆறு மாதமோ ஏழு மாதமோ சம்பளம் கொடுக்காமல் இழுத்து அடிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதியினையும் செய்வதில்லை என்ற புகாரும் வருவதாக வளைகுடா பத்திரிகைகள் நமக்கு தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் பல அடிப்படை தொழிலாளர்களுக்கு ஊரில் பேசப்பட்ட சம்பளத்தொகையும் இங்கு வந்தபின் கொடுக்கப் படும் சம்பளத்தொகையும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும்.

அந்தக் குறைந்த சம்பளமும் பல மாதங்கள் கிடைக்காத இக்கட்டான சூழலில், குடும்பப் பசியைத் தீர்ப்பதற்காக வளைகுடாவுக்கு வந்தவர்கள், தன் பசிக்கு உணவு தேடிக் கொள்ள வேறு நிறுவனத்திடம் அவர்கள் ஓடிப்போய் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை என்று எதுவும் கையில் இருக்காது. ஆனால் தைரியமாக வேறு நிறுவனத்திடம் போய் வேலை செய்வார்கள். அங்கும் இதுபோல் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தகாத குற்றச் செயல்களில் ஈடுப்படுகிறார்கள்.

அண்மைக் காலமாக துபையிலும் மற்றும் உள்ள வளைகுடா நாடுகளிலும் பல குற்றங்களும் தகாத சம்பவங்களும் நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.
இதனைக் கருத்தில் கொண்ட துபைய் அரசாங்கமானது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்று ஆய்வு செய்து, அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்த நிறுவனத்திலிருந்து 'ஓடிப் போய்' வேலை செய்பவர்கள் என்று அறிக்கையினை வெளியிட்டது. ஆகையால், 'ஓடிப் போனவர்கள்' உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கையினை ஓடிப் போன தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக எடுக்கப்படும் என்ற அரசு அறிக்கை வெளியானவுடன் 'ஓடிப் போன' பலர் தாயகம் திரும்பி விட்டனர்.

23.9.2007 தேதிவரை துபையில் 152,375 'ஓடிப் போன' தொழிலாளர்களுக்கு அவுட்பாஸ் கொடுத்து உள்ளனர். ஒரு சில தொண்டு நிறுவனங்களும் துபையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் தாய் நாடு திரும்பி செல்வதற்கு ஏதுவாகச் சில விமானங்களை வாடகைக்கு எடுத்து அந்தத் தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்.

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.

கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில்.

என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு.

சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

ஆக்கம்: அபூ ஆஃப்ரீன் முத்துப்பேட்டை

04-Aug-2008

புற்று நோய்க்கு இலவச சிகிச்சை

இப்போதெல்லாம் புற்றுநோய் பணக்காரர்களின் வியாதி அல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏழைகளும் பல்வேறு விதமான புற்று நோயால் அவதிப்படுகிறார்கள்.

சிகிச்சை, மருத்துவமனை செலவு என தவிக்கும் அவர்களுக்கு சென்னையில் இருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

இதன் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி. இந்த ட்ரஸ்ட், டாக்டர் சாந்தா வின் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ட்ரஸ்ட் ஏழை புற்று நோயாளிகளை முழுமையாகப் பாதுகாக்கிறதா?

ஆம். முழுமையாக. ஏழை புற்றுநோயாளிகள் எந்த ஊரில் இருந்து வந்தாலும் சரி, சிகிச்சை முடியும் வரை இங்கு முழுக்க முழுக்க இலவசமாகத் தங்கி இருக்க முடியும்.

காபி, சிற்றுண்டி, மதிய - இரவு உணவு, மாலை நேர பால் என்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

ஏழைகளைக் காக்க இறைவன் எங்காவது இருந்து கொண்டுதான் இருக்கிறான்.

-குமுதம்

03-Aug-2008

பள்ளி மாணவர்களுக்கென புதிய இணையதளம் துவக்கம்


ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீசரண் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள் ளோம்.
இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்கு மற்றும் உயிரியல் பாடங்களும் கற்றுத் தரப்படும்.
சிபிஎஸ்சி மற்றும் மாநில அரசின் பாடத்திட்டங்கள் இதில் பின்பற்றப்படும். மாதிரித் தேர்வுகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
இதற்கு ஆண்டுக்கு ரூ.1040 கட்டணம் பெறப்படும். சிடி வடிவிலும் மாணவர்கள் இதனைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த இணைய தள சேவை வழங்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டும் 2 லட்சம் மாணவர்கள் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.