ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 26 டிசம்பர், 2011

டைக்கூன் நிறுவனத்தால் ஏமாந்திர்களா? - புகார் கொடுக்கலாம்


டைக்கூன் நிறுவனத்தால் ஏமாந்திர்களா? - புகார் கொடுக்கலாம்

குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவ லக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தமிழ் நாட்டில் பல இடங்களில் டைக்கூன் எம்பயர் இன்டர் நேஷனல் பிரைவேட் லிமிட் எனும் நிதிநிறுவனத்தை திருப்பூர் நாராயணசாமி மற்றும் சிலர் சேர்ந்து நடத்தினர். 

அந்நிறுவனம் பொதுமக்களிடம் ஏராளமான பணத்தை முதலீடாக பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுத்த புகா ரின் பேரில் நாகர்கோவில் பொரு ளாதார பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.

பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி?

நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen) தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில் ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).
கூகிள் (google) :-
முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு இப்படி imindmap 4.1 rapidshare தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.

கீபோர்ட் கீயை தேவைக்கேற்றார் போல இடம் மாற்றலாம்

நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில நேரங்களில் தேவைப்படும்.


இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட் செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன் அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.

காகிதங்களிலிருந்து மின்சாரம் தயாரித்து சொனி நிறுவனம் சாதனை!! (படங்கள் இணைப்பு)

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில் நுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.


இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.

வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.

நண்பன் படத்திற்காக ஹாரிஸ் சுட்ட பாடல்கள் வீடியோ இணைப்பு ஆதாரத்தோடு!


தயவு செய்து விஜய் ரசிகர்கள் கோபப்படதிங்க. உண்மைதான் இது ,உங்க கோபத்தை ஹாரிஸ் ஜெயராஜ் மேல காட்டு காட்டுன்னு காட்டுங்க.இந்த பாட்ட எங்க இருந்து சுட்டார்னு ஆதாரத்தோடு நீங்களே பாருங்க . 


இந்த வீடியோ காட்சி ரசிகர்கள் மனதை புன்படுத்தியிருந்தாள் மன்னித்து விடுங்கள்.

கூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி! GOOGLE CHROME

கூகுள் க்ரோம் உலாவியில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பின்புலத்தில் தமிழ் FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனல்களில் பாடல்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ காது குளிர கேட்டபடி டென்ஷன் இன்றி பணிபுரிய ஒரு அட்டகாசமான தமிழ் FM நீட்சி!

Install பொத்தானை அழுத்தி, உங்கள் கூகுள் க்ரோம்
உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.

விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி

நம் வலைத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் அப்படி வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களுக்கும் இந்தியாவுக்குள்ளே விமான போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு நிச்சியம் உதவும் இது முன்னமே உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் ஆனாலும் தெரியாதவர்களும் இருக்ககூடுமே அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்.

முதலாவதாக YATRA இனையதளம் பற்றி பார்க்கலாம் இது இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை தேடலாம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தேடமுடியாது அதாவது From என்பது இந்தியா அல்லது இந்தியாவிற்குள் உள்ள விமான நிலையமாக இருக்கவேண்டும் இருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் .இந்தியாவின் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை

Yatra தளம் செல்ல கீழிருக்கும் படத்தை கிளிக்கவும்

ஆச்சரிய திருமணம்


ஆச்சரிய திருமணம்


நமது நினைவில் நிற்கும் பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் மற்றும் நிகழ்சிகள் வீடியோ. DOORDARSHAN DD TV


80"90" களில் தூர்தர்சனை தவிர வேறு தமிழ் சானல்கள் இருந்தது இல்லை வெள்ளி இரவு அரைமணிநேரம் திரைப்பட பாடல்களும், ஞாயிற்றுகிழமை சாயங்காலம் படத்தை தவிர வேறு ஏதும் வுருபிடியாக நிகழ்சிகள் வழங்கியது இல்லை அப்படி இருபதாக இருந்தால் அவை அனைத்தும் இந்தி டபிங் சீரியல்கள்தான் அதுவும் சனி ஞாயிறுதான். 

இன்று என்ன முடியாத டிவி சானல்கள் மற்றும் நிகழ்சிகள் வந்துவிட்டாலும் அப்போது தடங்கலுக்கு வருந்துகிறோம் என்பதை படித்துக்கொண்டே படம் பார்த்ததை நினைத்தால் இப்போதும் இன்பமாகவே இருக்கிறது.

அந்த காலலட்டங்களில் தூர்தரசனில் வந்த விளம்பரங்கள் கீழே பார்க்கவும். கண்டிப்பாக நம்மை 90 ஆம் ஆண்டின் நினைவுக்கு அழைத்துசெல்லும்.




முகமது நபியின் கால சுவடுகள்(போட்டோஸ்)


முகமது நபியின் கால சுவடுகள்(போட்டோஸ்)






திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் mp3 கேட்டு மகிழ!




சினிமா சிரலிகுறதா சீர் படுத்துகிறதா.
disc 1 இங்கு கிளிக் செய்யவும்.
disc 2 இங்கு கிளிக் செய்யவும். 


மகனா மகளா? 


disc 1 இங்கு கிளிக் செய்யவும்.


disc 2 இங்கு கிளிக் செய்யவும்.


disc 3 இங்கு கிளிக் செய்யவும்.

இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!

நான் ஆன்லைனில் இருக்கும் சமயம் என்னிடம் உரையாடும்(chat) நண்பர்களுக்கு நன்றி! அதேசமயம் எடுத்த எடுப்பிலேயே என் சுய முகவரிகளை கேட்கின்றார்கள்! முகவரிகளை தருவதில் யாதொரு சங்கடமும் இல்லை என்றாலும் அதில் தவறான செயலுக்கு பயன்படுத்துபவர்களும் இருகின்றார்கள் என்பதை மறந்துவிடகூடாது.

பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில் இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான் இது சாத்தியம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.

தற்போது உலக அளவில் என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிதுகொண்டு இருக்கிறது என்றாலும் முதல் முதலில் இன்ட்லி யில் என்னை பின் தொடர்ந்த நண்பர்களுக்கு RDX,kingkhan,senthazalravi,karisalkaran மற்றும் அணைத்து சமுகதலங்களில் இருந்து என்னை பின்தொடரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி! இதேபோல் அடுத்து அடுத்த பதிப்புகளில் நல்லபடியாக performance பன்னவே நினைகின்றேன்

1.கணினியில் இருந்து இலவசமாக வுலகம் முழுவதும் "SMS"அனுப்ப.




கணினியில் இருந்து அணைத்து நாடுகளுக்கும் SMS அனுப்ப அற்புதமான தளம் அதுவும் பண்டிகைகாலங்களில் ஒவ்வொரு நண்பர்களுக்காக வாழ்த்துக்கள் அனுப்பி நேரத்தை வீணாகாமல் ஒரேநேரத்தில் பத்துநபர்கள் வீதம் தொடந்து அனுபிகொண்டே இருக்கலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு!அதுவும் இலவசமாக!!

பயனுல்ல இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்

டெலிபோன் கம்ப்யூட்டர் டெலிவிசன் மூன்றையும் அற்புதமாக இணைக்க!

mobile witch remote 
connect to a projector 



நோக்கியோ டெலிபோன்,கணினி மற்றும் டெலிவிசன்(tv) இந்த மூன்றுக்கும் ஒரு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தினால் நமக்கு மிக பெரிய வுதவியாக இருக்கும்.


அந்த அற்புதம் இன்றயபதிபில் பார்போம்.

சந்தேகம் தீர்க்கும் இணையதள‌ம்


தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பதைவிட யாரிடமாவது மனம் திறந்து கேட்டு விட்டால் பிரச்ச்னையே இல்லை.

எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா? இப்படி புழுங்கித்தவிப்பவர்களுக்கு 
உதவக்கூடிய இணையதளத்தை அறிமுகம் செய்யத்தான். ‘ஈஸ் இட் நார்மல்’ இது அந்த இணையதளத்தின் பெயர்.தளத்தின் உள்ளடக்கமும் இந்த ஒரு கேள்வியில் அடங்கி விடுகிற‌து. அதாவது ஒருவருக்கு இருக்ககூடிய பயம் அல்லது உணர்வு சகஜமானது தானா என்னும் கேள்வி.

குற‌ட்டை விடுப‌வ‌ர்க‌ளை பார்த்தாலே ப‌ற்றிக்கொண்டு வ‌ருவ‌தாக‌ சில‌ர் கூற‌லாம்.இன்னும் சில‌ரோ விசில் அடிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்டாலே அடிக்க‌த்தோன்றுவ‌தாக‌ சொல்ல‌லாம்.

இப்ப‌டி ஒவ்வொருக்கும் ஒரு வித‌மான‌ விநோத‌மான‌ பழ‌க்க‌மோ அல்ல‌து ப‌ய‌மோ இருக்க‌லாம்.ஆனால் என்ன‌ பிர‌ச்ச‌னை என்றால் சில‌ருக்கு இந்த‌ உண‌ர்வு க‌வ‌லைத்த‌ராலாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இல்லாத‌ உண‌ர்வு த‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் இருக்கிற‌தோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வாட்டி எடுக்க‌லாம்.

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌, புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. 

அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம். ‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.

இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம். புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.

பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம் MUSIC

இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் 

இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.

இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.

முப்பரிமான தொலைக்காட்சிகள் ஒரு பார்வை:- 3D


சமீபத்தில் தான் லாஸ் வேகஸ்ஸில் நுகர்வோர் மின்ன‌ணுவியல் பொருட்காட்சி நடந்தது அதாவது Consumer Electronics Show . அந்த பொருட்காட்சியில் U.S தனது உலகளாவிய அற்புதமான தயாரிப்புகளை வெளிப்படுத்தியது முக்கியமாக முப்பரிமாண தொலைக்காட்சிப் பெட்டிகள். 

இதில் பல முன்னணி நிறுவனங்களான Panasonic, Sony, Samsung, Toshiba மற்றும் LG ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தரமான முப்பரிமாண தொலைக்காட்சிகளை வரும் ஆண்டில் வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.சரி இப்பொழுது முப்பரிமாண தொலைக்காட்சி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

முப்பரிமாண தொலைகாட்சி என்றால் அளவிலும்,நீளத்திலும்,அகலத்திலும் ஒரு தரமான, நிஜம் போல் தோன்றும் பொய்க் காட்சி. இப்பொழுது முப்பரிமாண படங்கள் அனைவராலும் மிகவும் கவரப்பட்டு வருகிறது, முக்கியமாக "அவதார்" திரைப்படத்திற்கு பிறகு. முப்பரிமாணம் என்பது திரைப்படத்தோடு நின்று விடாது அல்லவா! எனவே இதற்கு அடுத்த கட்டமாக முப்பரிமாண தொலைகாட்சி புனையப்பட்டுள்ளது (invention:) இந்த முப்பரிமாணம் பற்றி John Landau (அவதார் படத்தின் தயாரிப்பாளர்) கூறுகையில் "இந்த முப்பரிமாணம் என்பது எல்லா இடத்திலும் ஒரு ஒலி அலையைப் போல் இருக்கும்" என்கிறார்.

டெக்ஸ்ட் பைலை ஒலி வடிவில் மாற்றலாமே!

எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கென எந்தவொரு மென்பொருளையும் டவுன்லோட் செய்யவோ கணினியில் நிறுவவோ வேண்டியதில்லை. ஓன்லைனில் பைல் வடிவை மாற்றும் இந்த வசதியைத் தருகிறது Zamzar. எனும் இணையதளம். இத்ன் மூலம் டெக்ஸ்ட் வடிவிலுள்ள பைல்களை MP3 பைலாக மாற்றிக் கொள்ளலாம். 

இந்த பைல் மாற்றும் சேவை மூலம் எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) பைல்கள் மட்டுமன்றி odt, pdf, pub, txt, wpd, wps பைல்களையும் ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம். எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) ஆவணமொன்றை MP3 பைலாக மாற்றும் செயற்பாடானது மிக சுலபமானது.. இந்த இனைய தளத்திற்குச் சென்று கணினியிலுள்ள ஆவணத்தை தெரிவு செய்து அதனை அப்லோட் செய்வதோடு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.. 

ஒரு படத்தை Scan செய்திட முன்னர் ....


புகைப்படம் ஒன்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அப்படத்தின் டிஜிட்டல் பிரதியொன்றைப் பெறுவது மாத்திரமல்லாமல் அதனை மேலும் மெருகூட்டல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், மின்னஞ்சலில் பறிமாறிக் கொள்ளல், அந்தப் படத்திலிருந்து மேலும் பிரதிகளைப் பெறல், அல்லது அளவில் பெரிதாகவோ சிறிதாகவோ அச்சிட்டுக் கொள்ளல் என பல வசதிக்ள் கிடைக்கப் பெறுகின்றன.
ஸ்கேனர் மூலம் அச்சிட்ட படங்களை மட்டுமன்றி நெகடிவ் (Film Negative) மற்றும் ஸ்லைடுகளையும் (Slides) கூட ஸ்கேன் செய்யலாம். எனினும் அதற்கு ஸ்கேனரில் TMA எனும் Transparent Materials Adapter பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்..

ஸ்கேனர் கொண்டு ஒரு படத்தை ஸ்கேன் செய்வதொன்றும் கடினமான வேலையல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனினும் சிறந்த முறையில் ஸ்கேன் செய்வதற்கு ஸ்கேனர் ரெசலுயூசன், பைல் படிவம் போன்றவற்றை பொருத்தமான முறையில் மாற்றியமைக்கவும் அறிந்திருத்தல் அவசியம்

ஒரு படத்தை ஸ்கேன் செய்வதற்கு முன்னர் அதனை என்ன தேவைக்காகப் பயன் படுத்தப் போகிறீர்கள் என்பதனை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஸ்கேன் செய்வதற்குப் பொருத்தமான ஸ்கேனர் ரெசலுயூசனையும் பைல் வடிவத்தையும் மாற்றியமைக்க வேண்டும். .

Bluetooth Vs Wi-Fi – என்ன வேறுபாடு?

செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (mobile computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளது.. அதற்கேற்றாற் கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியில்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது. வயறின்றி ஏனைய கணினிகளுடன் இணைக்கும் வசதியுடன் கூடிய மடிக்கணினிகளும் தற்போது அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன.நீங்கள் ஒரு மடிக் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவரா? அப்படியனால் ப்லூடூத், வைபை போன்ற வார்தைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பயன்படுத்தியும் இருக்கலாம். இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் என்ன செய்கிறன? எந்த வகையில் அவை வேறு படுகின்றன?

ப்லூடூத் - வைபை இவை இரண்டுமே கம்பியில்லா கணினி வலையமைப்புக்கான தொழில் நுட்பங்களே இவை கம்பிகளுக்குப் பதிலாக வான் அலைகளை (Radio Frequency) மூலம் வலையமைப்பை உருவாக்குகின்றன.. இவையிரண்டும் 2.4 Ghz அலைவரிசையில் செயல்பட்டாலும் அவை பயன் படுத்தப்படும் விதத்தில் மாறுபட்டு நிற்கின்றன.வைபை தொழில் நுட்பத்தின் பிரதான நோக்கம் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் கம்பியில்லா அதிவேக இணைய இணைப்பைப் பெறுவதே என கடந்த வாரம் பார்த்தோம். எனினும் ப்லூடூத் தொழில் நுட்பத்தின் பிரதான பயன்பாடு ஒரு தனி நபர் சார்ந்த வலயமைப்பை உருவாக்குவதாகும். .

ஒரு இணைய தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?

ஒவ்வொரு இணைய தள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி ( IP Address ) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த ஐபி முகவரியை வெப் பிரவுஸரில் காண்பிப்பதில்லை.

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!


இணைய வானொலி என்பது வானலையூடு ஒலிபரப்பாகும் வழமையான வானொலி சேவை போன்றதே. இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணினியூடாக ஒலிபரப்புக்குச் செவி மடுக்கிறோம். இணைய வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதற்குப் புதிதாக எந்த வன்பொருளோ மென்பொருளோ நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய் இணைய தளத்தை அணுகுவதன் மூலம் இணைய வானொலிகளைச் செவி மடுக்கலாம். இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்படுகிறது.
இணையத்தில் ஒலி வடிவில் உள்ள பைல்களைப் பகிர்ந்து கொள்ள போட் காஸ்டிங் (Podcasting) எனும் ஒலிபரப்பு முறை பயன்பாட்டில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். போட்காஸ்டிங் முறையில் ஒலிபரப்பைக் கேட்பதாயின் உரிய பைலை முழுமையாக் எமது கணினிக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக போட்காஸ்டிங் முறையில் ஒரு பாடலைக் கேட்க விரும்பினால் அந்தப் பாடலை முழுமையாக எமது கணினிக்கு டவுன்லோட்
 செய்த பிறகே கேட்க முடியும்

.

ஆனால் இணைய வானொலி என்பது போட்காஸ்டிங் போன்றதல்ல. இணைய வானொலி சேவையில் ஸ்ட்ரீமிங் (Streaming) எனும் தொழில் நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒலி வடிவிலுள்ள ஒரு பைலானது முழுமையாக் எமது கணினியை வந்தடையு முன்னரே வந்து சேரும் அளவிற்கேற்ப ஒரு ஒலிப் பகுதியை கேட்கக் கூடியதாயிருக்கும். முழுமையாக அந்த பைல் டவுன்லோட் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணைய வனொலி (ஓடியோ) மட்டுமன்றி இணைய தொலைக்காட்சியும் (வீடியோ) இவ்வாறே இந்த ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பப்படுகிறது.

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. 

மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

நவீன தொழில்நுட்பம் – பெண்களே உஷார் !

பதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வெகுநாளாய் இருந்தது. எங்கேயாவது சென்றாலும் நல்ல ஆசிரியரும் கிடைப்பதில்லை. பணமும் அதிகமாக வசூல் செய்வார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வலைப்பதிவு எழுதும் இவர்கள் தான் நினைவிற்கு வந்தனர்.


பாடத்திட்டம் போல ஒவ்வொரு படிநிலையாக அருமையான படங்களுடன் விளக்குகிறார். கற்பதற்கும் இனிமையாக உள்ளது.மேலும் மாதிரிப்படங்கள் கூட இலவசமாக தருகிறார்.


இவரும் அட்டகாசமான போட்டோஷாப் கட்டுரையாளர். அழகான மற்றும் அசத்தலான எஃபெக்ட்டுகளை பற்றி எழுதி வருகிறார். இவரின் பட விளக்கங்களும் அருமையாக உள்ளது.

Facebook கடந்து வந்த பாதை


உலகமெங்கும் பரந்து விரிந்து உலகத்தினை ஒரு வீடாக சுருக்கி வைத் திருக்கும் இணையத்தில் காணப்படக்கூடிய குறிப்பிட்டு சொல்லகூடிய முத்துக்களில் ஒன்றான facebook நம்மவர்களில் பாஷையில் மூஞ்சி புத்தகம், முகப்புத்தகம் என அழைக்கப்படும் இது மிக முக்கிய பங்காற்றி வருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Facebook 

இதன் வரலாற்றை அறிவது சுவாரசியமானது.எனவே அதன் முக்கிய வளர்ச்சி பாதையின் முக்கிய படிக்கற்களை பார்க்கலாம்.


February 2004
Facebook இன் நிறுவனர்களான Mark Zukerberg ,Dustin Moskovitz ,Chris Hughes ,Eduardo Saverin ஆகியோர் இணைந்து அவர்களின் ஹார்வர்ட் கல்லூரியில் facebook இனை நிறுவுகின்றனர்.

March 2004
Satandford ,Columbia ,Yale போன்ற கல்லூரி மாணவர்களும் இணைகின்றனர்

September 20041. "Groups Application " facebook இல் சேர்க்கப்படுகிறது.
2. Facebook உறுப்பினரின் profile இக்கு wall எனும் feature சேர்க்கப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணம் Islamic Marriage

மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில்

உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில
சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது
எடுக்கப்பபட்டது
என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல்
காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின்
நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச்
சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப்
பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின்
தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய www.speedtest.netஎன்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.


தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும் 


நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி

பல வேளைகளில், நடக்க விருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சில நாட்கள் கழித்து இமெயில்களை அனுப்புவோம் என்று திட்டமிடுவோம். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள், 

திருமண நாள் வாழ்த்துக் கடிதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் அனுப்பினால் தான், பெறுபவர் மகிழ்ச்சி அடைவார். குறிப்பிட்ட நாட்களில் நம் வேலைப் பளுவின் காரணமாக அல்லது மறதியாய் அனுப்பத் தவறிவிடுவோம். முன் கூட்டியே இமெயில்களைத் தயார் செய்து ட்ராப்ட்டாக வைத்திடலாம். ஆனால் குறிப்பிட்ட நாளில் அவற்றை நினைவில் வைத்து அனுப்ப வேண்டுமே. அதைத்தான் நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். இதற்கு என்னதான் வழி? 

ஒன்றா, பல வழிகள் உள்ளன. இது போல எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய மெயில்கள், குறிப்பிட்ட நாளில் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அனுப்ப வேண்டிய மெயில்கள் என முன்கூட்டியே தயாரித்து வைத்து அனுப்ப பல இணைய தளங்கள் நமக்கு வசதியை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

மீடியா ப்ளேயரில் அனைத்து விதமான வீடியோ பார்மேட்டுகளையும் காண....

நாம் விண்டோஸ் இயங்குதளம் (Operating System) தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.

இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது. 

இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம் மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, NeroDigital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை மீடியா பிளேயரில் காண முடியும்.

ரெஜிஸ்ட்ரி மர்மங்கள் REGISTRY SECRETS

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பலரோ, ரெஜிஸ்ட்ரியா அதுக்குள்ள போகாதே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா கம்ப்யூட்டர் பூட் ஆகாது, என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா? ஏன் அதை எடிட் செய்யக் கூடாது என்று சொல்கின்றனர்?


உண்மைதான். ரெஜிஸ்ட்ரியில் நேரடியாக எதேனும் மாற்றங்களைச் செய்தால் அது கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பாதிக்கும்; அல்லது மேம்படுத்தும். எனவேதான் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தும் அனைவரும் ரெஜிஸ்ட்ரி எடிட்டிங் குறித்து தெரிந்து கொள்வதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை.

தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட்

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம் 
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது. 

யாருக்கும் வெட்கமில்லை...- ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.

இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

அருந்ததி ராய்

The God of Small things என்று தலைப்புக் கொடுக்க மனம் வராமல் அதை எழுதியவரின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஏதாவது விருது பெற்றதும் அதற்கு ஒரு தனிப் புகழ் கிடைத்து விடுகிறது. புக்கர் பரிசு கிடைக்கா விட்டால், புத்தகக் கடையில் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒருவர் எழுதிய புத்தகத்தைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். அதே போலத்தான் ஆஸ்கர் விருது பெற்று விட்ட திரைப்படங்கள்.

1990களின் இறுதிகளில் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, இருபுறமும் இறக்கைகள் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நாட்களில் ஏதோ ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இதுக்கு என்ன விருது என்றுதான் தோன்றியது. விடாப்பிடியாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாதி புத்தகத்துக்கு மேல் போக முடியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'தலைசிறந்த கதைகளில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அத்தகைய கதைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்க விரும்புவீர்கள். கதையின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து ஒட்டிக் கொள்ளலாம். கதகளி கலைஞர்கள் அதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.'

சுவர்க்கத்துக்கு வழி

h2g2
ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். The Hitch Hiker's Guide To The Galaxy (H2G2) எனப்படும் "அண்டத்தைச் சுற்ற ஊர்சுற்றிக்கு வழிகாட்டி" என்ற புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு, அதைப் படித்த பின்பு என்று.
1.
நிகழ்ச்சி:
சென்னையில் 42 டிகிரி வெயில். இரு சக்கர வண்டியில் சாலை நிறுத்தத்தில் காத்திருந்து அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறோம். முன்னால் போகும் வண்டியின் சொதப்பலால் சிவப்பு வரும் முன்னால் கடக்க முடியாமல் இன்னும் 120 விநாடிகள் வெயிலில் நிற்க வேண்டியதாகி விட்டது.
H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
செம கடுப்பாகி முன்னே நிற்கும் வண்டி ஓட்டியை சபித்தபடி, முடிந்தால் இறங்கி நாக்கைப் புடுங்கிக்கிறது போல நான்கு கேள்வி கேட்டு, கொதித்துப் போக வேண்டும்.
H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.
2.
நிகழ்ச்சி:
இந்துத்துவா இயக்கங்களின் அடாவடி என்று பதிவு எழுதி, அதற்கு வரும் பின்னூட்டங்களில் தாக்குதல்கள், பதில் எழுதி எழுதி கை வலி, ஒத்த கருத்து சொன்னவர்கள் மீது பாசம், எதிர்க் கருத்து சொன்னவர்கள் மீது இன்னொரு வகையான பாசம் என்று ஓடும் நாட்கள்

கரித்துண்டு

மு வரதராசனார்

நான் முதல் முதலில் படித்த முழு நீள புத்தகம் மு.வ. வின் கரித்துண்டு. அதுவரை ஆனந்த விகடன் துணுக்குகள், சிறுகதைகள், குமுதம் ஆறு வித்தியாசம், ராணியில் சிறுவர் தொடர்கதை என்று போய்க் கொண்டிருந்த வாசிப்பு அனுபவத்துக்கு, கரித்துண்டு புதுக் கதவைத் திறந்து விட்டது. மதிய வேளையில் கண்ணயர விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்த என்னை வாய் மூட வைக்க அம்மா கையில் கொடுத்தது இந்தப் புத்தகம்.

அதில் கையாளப் பட்டிருந்த உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அப்போது முழுவதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தூய தமிழ்நடை, சேர்ந்தே ஒலித்த முற்போக்குப் பொதுவுடமைக் கருத்துக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. தமிழில் எந்தக் கருத்தையும் பிறமொழிக் கலப்பின்றி இயல்பான சொற்களுடன் சொல்ல முடியும் என்று அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயதிலேயே பதித்து விட்டதற்கு முவவுக்கும் கரித்துண்டுக்கும் நன்றி.

ஏதோ, தெருவில் கரித்துண்டால் ஓவியம் வரைந்து காசு திரட்டும் ஓவியர், அவரைப் பார்த்துக்கொள்ளும் பொன்னி, அவளது குழந்தைகள், மழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் அவர்களது குடிசைப் பகுதி, இதையெல்லாம் கதை சொல்லும் திருவேங்கடம், அலுத்துக் கொள்ளும் அவர் வீட்டு அம்மா, திருவேங்கடம் சந்திக்கச் செல்லும் பேராசிரியர், திருவேங்கடத்தின் நண்பன் கம்யூனிச இயக்கத்தில் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவது, பேராசிரியரின் சீர்திருத்தக் கருத்துக்கள, முடிச்சுகளுக்கெல்லாம் முடிச்சாக பேராசிரியரின் துணைவிக்கும் கால் இல்லாத ஓவியருக்கும் இருக்கும் முன்கதைத் தொடர்பு என்று விரியும் கதையில் சின்ன வயதில் படிக்கப் பொறுமையில்லாத நீளமான பத்திகள்.

வெற்றிக்கு ஏழு பழக்கங்கள் - 4

Seven Habits 3 - Stephen Covey

சமூகத்தில் பிறருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு முதலில் தன்னை சுதந்திர மனிதனாக, பிறரைச் சாராதவனாக உருவாக்கிக் கொள்வது அடிப்படைத் தேவை. சமூக வாழ்க்கை என்பது பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாக இல்லாமல், பிறருடன் சேர்ந்து செயலாற்றும் கூட்டு வாழ்க்கையாக அமைய வேண்டும்.

அதற்கு முதல் மூன்று படிகள் மூலம், நமது நோக்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு நேரத்தை சரியான வழியில் செலவளிக்கப் பழகிக் கொள்கிறோம்.

அடுத்த மூன்று படிகளில் உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவினருடன் எப்படி உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

4. இரண்டு தரப்பும் வெற்றி பெறும் வழியைப் பார்க்க வேண்டும்.
5. முதலில் அடுத்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
6. 1+1 > 2

மந்திரக் கம்பளம்

வாண்டு மாமா
நான் படித்த குழந்தைகளுக்கான கதைகளில் மிகச் சிறந்த கதை வாண்டு மாமா எழுதிய மந்திரக் கம்பளம் என்ற கதை. எங்கள் அப்பா கிராமம், மருங்கூரில் இருக்கும் சண்முகானந்தா நூலகத்தை முற்றுகை இட்டு ஒரு கோடை விடுமுறையில் அங்கு இருந்த, அந்த உயரப் பையன் படிக்கக் கூடியது, என்ற புத்தகங்கள் தீர்த்து விட்ட போது மாட்டாமல் பிறிதொரு காலத்தில் கிடைத்தது, கெட்டியாக அட்டை போடப்பட்ட இந்தப் புத்தகம்.

யாரோ செய்து குளறுபடியால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டிருந்தது. இந்தக் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் எனறு கணக்கே கிடையாது. சிறுவர்களுக்காக எழுதுகிறேன் என்று மழலை மொழியில், உயரத்திலிருந்து கொண்டு கதை சொல்லும் பாணி என்றுமே பிடித்ததில்லை. இந்தக் கதையில் முழு சிந்திக்கும் மனிதர்களாக குழந்தைகளை மதித்து எழுதியிருப்பார் வாண்டு மாமா.

மோகமுள்

தி ஜானகிராமன்
'பிள்ளைப் பருவ அறியாமைகள் கலைந்து நடைமுறை வாழ்க்கையாக எழுதப்பட்ட அரிய எழுத்தை முதல் முதலில்் சந்தித்தது, அதிலேயே கட்டுண்டு போனது' ஜானகிராமனின் மோகமுள்ளில்.

நல்லவன், கெட்டவன், நன்மை தீமை என்று கதைகள் இல்லாமல் மனிதர்களாக வடிக்கப்பட்ட கதைகளில் உணர்ந்து முதலில் படித்தது மோகமுள்.
அதற்கு முன்பே ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போல படித்திருந்தாலும், அதெல்லாம் எங்கோ வேறு ஒரு உலகில் நடப்பதாக உருவகித்துக் கொண்டு படிப்பேன்.

மோகமுள்ளில்தான், கும்பகோணம் புழுதி பறக்கும் தெருவில் குடும்பக் கிளைகள் தேடும் சாஸ்திரிகளில் ஆரம்பித்து, பாபு என்ற 'சின்ன்னப்' பெயரைக் கொண்ட நாயகனின் மன ஓட்டங்களில் மாட்டிக் கொண்டு மிதந்து போன அனுபவங்கள் மறக்க முடியாதவையாக மனதில் உறைந்து போயின.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பட்ஸ் போஜன் உணவு விடுதி கட்டிடத்தில் மாடியில் ஒட்டுக் குடித்தனமாக இருந்த / இருக்கும் காமராசர் நினைவு நூலகம்தான் கல்லூரியில் படிக்கும் போது இந்த நூலை முதலில் மடியில் போட்டது. அப்புறம் வேலைக்குப் போய் சொந்தப் பிரதி வாங்கி நினைக்கும் போதெல்லாம் கைக்கு வந்த பகுதியைப் பிரித்துப் படிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் ஜானகிராமனின் எழுத்து கட்டிப் போடும்.

ஒரு உண்மை மனிதனின் கதை

பரீஸ் பலவோய்
சின்ன வயதில் படித்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கதை. நாயகனின் பெயர் கூட அரைகுறையாகத்தான் நினைவிலிருக்கிறது. அலெக்ஸெய் என்ற பெயர்.

எங்கள் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளியிருந்து கல்லூரி பேராசிரியரின் குட்டி நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிப்பேன். அதில் இது கிட்டத்தட்ட என் புத்தகமாக மாறி விட்டது போல எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. கடைசியில் ஒரு முறை மூச்சைப் பிடித்துக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்து விட்டேன்.

சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்கள் சேர்ப்பு இளகி தாளாக வந்து விடுவது சீக்கிரம் நடக்கும். கடைசியாக நான் படித்தது தாள் தாளாகத்தான். வளர்ந்து புத்தகம் வாங்கும் வசதி வந்த பிறகு நியூ செஞ்சுரி புத்தகக் கடையில், இணையத்தில் எங்கும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நூலின் ஆசிரியரின் ஆங்கிலப் பெயர் தெரியாததும் ஒரு பிரச்சனை. இதை எழுதவதற்காகத் தேடியபோது அமேசானில் கிடைத்தே விட்டது :-)

அலெக்ஸெய் இரண்டாவது உலகப்போரின் போது சோவியத் விமானப் படையில் விமான ஓட்டியாக இருக்கிறான். கதையின் ஆரம்பமே அவனது விமானம் அடிபட்டு காட்டில் விழுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. மனித நடமாட்டமே இல்லாத பனிக்காட்டில் குளிர் காலத்தில் இவன் உயிர் மட்டும் பிழைத்து காலில் பலத்த அடிபட்டு மாட்டிக் கொள்கிறான்.

ராஜபாட்டை – ஃபுட் பாய்சன் மசாலா!


மசாலா படங்களில் கூட லாஜிக் பார்ப்பதில் தெளிவான பார்ட்டிகள் நம்ம தமிழ் ரசிகர்கள்.

ஹீரோ எப்படி அடித்தான் என்பதை விட எதற்காக அடித்தான் என்பதைத்தான் கண்களில் விளக்கெண்ணேய் விட்டுக்கொண்டு பார்ப்பார்கள். 

வில்லன் வெறும் புஜபலத்தோடு இருக்கிறானா அல்லது ஹீரோவுக்கே தண்ணிக்காட்டும் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறாரான என கண்கொத்திப் பாம்பாக கவனிப்பார்கள்.

ஹீரோயின் இளமா கிழமா என்பது கூட அவர்களுக்கு முக்கியமல்ல எதற்காக ஹீரோவைக் காதலிக்கிறாள் என்பதில் நேர்மையான காரணம் இருந்தால் காலரை தூக்கிக் விட்டுக் கொண்டு இரண்டரை மணிநேரம் இவர்களும் அவளைக் காதலிப்பார்கள். 

ஓலைப்பட்டாசு — சுஜாதா

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.

பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.
சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள்.

கடையில் திருடுவேரை கண்டறியும் நவீன வழி!!

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங் மால்களில் யாருக்கும் தெரியாமல் பொருட்களை திருடுவது இன்னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம்.

இதுபோன்ற நவீன கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக அவுஸ்திரேலிய முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர் சேர்ந்து ஹூ-டியூப் என்ற பெயரில் இணையத்தளம் தொடங்கியிருக்கிறார்கள். கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கமெராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

அளவில் சிறிய ஆனால் திறன் வாய்ந்த வீடியோ கன்வேட்டர்

இணையத்தில் பலவகையான வீடியோ கன்வேட்டர்கள் இருக்கின்றன. சில இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அளவில் சிறியதும் அதிக ஆப்ஸன்களை தந்து குழப்பாமலும் கணினியின் வளத்தை முழுவதும் உபயோகித்து வீடியோக்களை வேகமாக கன்வேட் செய்து தரும் திறன் வாய்ந்த வீடியோ கன்வேட்டர் தான் Aero Convert எனும் இலவசமான வீடியோ கன்வேட்டராகும்.

AVI, FLV, MOV, MP3, MP4, MPG, WAV, and WMV ஆகிய பிரபலமான பார்மட்டுக்களிலும் ஏனைய வற்றிலும் வேகமாக கன்வேட் செய்ய வல்லது.

தேவையான பார்மட்டை தேர்வு செய்து உடனடியாக கன்வேட்டை தொடங்க கட்டளையிடலாம்.

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!

'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் வாசித்தபோது ஜூனியர் விகடன் மதவெறி வெளிப்பட்டது. முழு கட்டுரையையும் வாசிப்போம்:
******************************
"இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?''கண்மாய்க்குள் தூக்கிப் போட்ட மாணவர்கள்!

போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி, சதிச் செயல்களுக்காக வெடிகுண்டுகளை முதன் முதலில் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்த இடம், மதுரை மாவட்டம், ஓவா மலை. இப்போது, அதற்கு அருகிலேயே பஸ்ஸுக்குள் வெடிகுண்டு சிக்கியிருப்பது மதுரை மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது. 

டிசம்பர் 6-ம் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்ட சூழ்நிலையில், அதற்கு மறுநாள் காலையில்தான் இந்தச் சம்பவம். குண்டு வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்ஸில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர்கள் சயாரத்னம், அர்ஜூன் ஆகியோரிடம் நாம் பேசினோம். 'மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பஸ் அது. 7-ம் தேதி காலையில் 7.10 மணிக்கு திருவாதவூர் வந்த அந்த பஸ், 7.25 மணிக்கு அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போ ஸீட்டுக்கு அடியில், பாலிதீன் பை ஒண்ணு கிடந்தது. எங்களோடு பஸ்ல வந்த இலங்கை அகதியான நிஷாந்த் என்பவர் அதை எடுத்து, கண்டக்டர் விருமாண்டியிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த கண்டக்டர், 'இது வெடிகுண்டு மாதிரில்ல இருக்கு. உடனே வெளியே தூக்கிப் போடுப்பா’னு சொன்னார். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்த, சில மாணவர்கள் கீழே இறங்கி அந்த பார்சலை முத்தம்பட்டி கண்மாய்க்குள் போட்டார்கள்.

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்



 Core Temp எனும் மென்பொருள் பற்றிய விபரங்கள் இங்கே.

Core Temp 

இதன் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது.

1 கருத்து:

  1. அந்நிறுவனம் பொதுமக்களிடம் ஏராளமான பணத்தை முதலீடாக பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுத்த புகா ரின் பேரில் நாகர்கோவில் பொரு ளாதார பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
    vumoo

    பதிலளிநீக்கு