சொட்டுநீர் உரபாசன முறையில் கரும்பு சாகுபடி
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
கரும்பு பயிரானது மிக முக்கியமான பணப்
பயிர்களில் ஒன்றாகும். நடப்பு காலங்களில் பருவமழை பொய்த்து வருவதால் பெரும்பாலான
இடங்களில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, சொட்டுநீர் வழி உர
பாசன முறையில் குறைந்த நீர் செலவில் அதிக உரப்பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல்
எடுக்கலாம். எக்டருக்கு 160 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான விளைச்சல் 25-40 விழுக்காடு
நீர் சிக்கனத்துடன் நிலத்தடி சொட்டுநீர் உரப்பாசனம் மற்றும் நடவு முறையின் மூலம்
எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நடவு முறையில் இது எக்டருக்கு 106 மெட்ரிக் டன்னாக
உள்ளது.
நன்மைகள்: முழுமையான இயந்திர அறுவடை, அதிக கரும்பு எடை, அதிக மறுதாம்பு பயிருக்கு ஏற்றது, 25-40 விழுக்காடு நீர் சிக்கனம், களர் மண் மற்றும் உவர்ப்பு நீர் பகுதிக்கும் ஏற்றது. வேலை ஆட்களின் திறன் மற்றும் எண்ணிக்கை குறைவு. அதிக நிகர லாபம்.
நிலம் தயார் செய்தல்: முதலில் உளிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் சட்டி கலப்பை கொண்டு கட்டி இல்லாமல் உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 12.5 டன் ஆலைக்கழிவுகளை இடவேண்டும். 25 செ.மீ. ஆழமும் 40 செ.மீ. அகலமும், 180 செ.மீ. இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.
விதை கரணைகள் நடவு: குறுகிய கால (7-8 மாத) வயதுடைய விதை கரணைகள் தேர்வு செய்யவும். கரணைகள் வெட்டுவதற்கு முன் ஏக்கருக்கு 125 கிலோ யூரியாவை ஒவ்வொரு 15 நாட்களின் இடைவெளியில் இடவேண்டும். விதை கரணைகளை ஒரு மீட்டர் நீளத்திற்கு 8 இரு பருகரணைகளை தேர்வு செய்ய வேண்டும். கரணைகளை 0.5% கார்பன்டாசிம் கரைசலில் ஊறவைப்பதன் மூலம் நோய் பரவாமலும் பாதுகாக்கலாம். பக்க குழாய்களை குழிகளின் நடுவே வைத்து லேசாக மண்ணைக் கொண்டு மூடவேண்டும். கரணைகளை?குழியின் இரண்டு ஓரங்களில் பக்க குழாய்களை நடுவே வைத்து நடவு செய்ய வேண்டும். நடவுக்குப் பின்னர், மண்ணைக்கொண்டு கரணைகளை மூடவேண்டும். பக்க குழாய்களை கரணைகளுக்கும் அடியில் 5- 7.5 செ.மீ. ஆழத்தில் பதிக்க வேண்டும்.
சொட்டுநீர் அமைப்பு: நிலத்தடி சொட்டுநீர் உர பாசன முறைக்கு உட்புறம் சொட்டுவான்கள் உள்ள பக்க குழாய்களை தேர்வு செய்ய வேண்டும். பக்க குழாய்களை 20-30 செ.மீ. ஆழத்தில் கரணைகளுக்கு அடியில் சொட்டுவான்கள் மேல்புறம் பார்த்தவாறு அமைக்க வேண்டும். பக்க குழாய்களுக்கு இடையேயான இடைவெளி 180 செ.மீ. இருக்க வேண்டும். நீர் தொட்டிகளுக்கு இடையேயான இடைவெளி 60 செ.மீ. நீர் சொட்டும் திறன் 4 லிட்டர் / மணிக்கு இருக்க வேண்டும். மென்பக்க குழாய்களை உபயோகிப்பதன்மூலம் முதன்மை செலவை குறைக்கலாம். தகுந்த நீர் வடிகட்டிகள் மற்றும் உரச்செலுத்திகளை பயன்படுத்துவதன் மூலம் நீர்தொட்டிகளில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்
Read more
நன்மைகள்: முழுமையான இயந்திர அறுவடை, அதிக கரும்பு எடை, அதிக மறுதாம்பு பயிருக்கு ஏற்றது, 25-40 விழுக்காடு நீர் சிக்கனம், களர் மண் மற்றும் உவர்ப்பு நீர் பகுதிக்கும் ஏற்றது. வேலை ஆட்களின் திறன் மற்றும் எண்ணிக்கை குறைவு. அதிக நிகர லாபம்.
நிலம் தயார் செய்தல்: முதலில் உளிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் சட்டி கலப்பை கொண்டு கட்டி இல்லாமல் உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 12.5 டன் ஆலைக்கழிவுகளை இடவேண்டும். 25 செ.மீ. ஆழமும் 40 செ.மீ. அகலமும், 180 செ.மீ. இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.
விதை கரணைகள் நடவு: குறுகிய கால (7-8 மாத) வயதுடைய விதை கரணைகள் தேர்வு செய்யவும். கரணைகள் வெட்டுவதற்கு முன் ஏக்கருக்கு 125 கிலோ யூரியாவை ஒவ்வொரு 15 நாட்களின் இடைவெளியில் இடவேண்டும். விதை கரணைகளை ஒரு மீட்டர் நீளத்திற்கு 8 இரு பருகரணைகளை தேர்வு செய்ய வேண்டும். கரணைகளை 0.5% கார்பன்டாசிம் கரைசலில் ஊறவைப்பதன் மூலம் நோய் பரவாமலும் பாதுகாக்கலாம். பக்க குழாய்களை குழிகளின் நடுவே வைத்து லேசாக மண்ணைக் கொண்டு மூடவேண்டும். கரணைகளை?குழியின் இரண்டு ஓரங்களில் பக்க குழாய்களை நடுவே வைத்து நடவு செய்ய வேண்டும். நடவுக்குப் பின்னர், மண்ணைக்கொண்டு கரணைகளை மூடவேண்டும். பக்க குழாய்களை கரணைகளுக்கும் அடியில் 5- 7.5 செ.மீ. ஆழத்தில் பதிக்க வேண்டும்.
சொட்டுநீர் அமைப்பு: நிலத்தடி சொட்டுநீர் உர பாசன முறைக்கு உட்புறம் சொட்டுவான்கள் உள்ள பக்க குழாய்களை தேர்வு செய்ய வேண்டும். பக்க குழாய்களை 20-30 செ.மீ. ஆழத்தில் கரணைகளுக்கு அடியில் சொட்டுவான்கள் மேல்புறம் பார்த்தவாறு அமைக்க வேண்டும். பக்க குழாய்களுக்கு இடையேயான இடைவெளி 180 செ.மீ. இருக்க வேண்டும். நீர் தொட்டிகளுக்கு இடையேயான இடைவெளி 60 செ.மீ. நீர் சொட்டும் திறன் 4 லிட்டர் / மணிக்கு இருக்க வேண்டும். மென்பக்க குழாய்களை உபயோகிப்பதன்மூலம் முதன்மை செலவை குறைக்கலாம். தகுந்த நீர் வடிகட்டிகள் மற்றும் உரச்செலுத்திகளை பயன்படுத்துவதன் மூலம் நீர்தொட்டிகளில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்
தம்புள்ளவில் மரக்கறி விவசாயிகள் போராட்டம்
தம்புள்ள பகுதியில் மரக்கறி (காய்கறி) வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்கறிகளை வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லும்போது அவற்றுக்கான பிளாஸ்டிக் கூடைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற அரச உத்தரவை எதிர்த்தே இந்தப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.
தம்புள்ள நகருக்கு அருகே யாழ்- கண்டி வீதியான ஏ 9 பாதையை மறித்து அதில் மரக்கறிகளை கொட்டி சுமார் 1000 விவசாயிகள் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும், ஆயினும் நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அது கட்டாயமாக அமல்படுத்தப்பட்டு, பிளாஸ்டிக் கூடைகளில் அல்லாமல் வேறு கொள்கலன்களின் மரக்கறிகளை கொண்டு சென்ற வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குகளில் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது அவை பழுதடைவதை தடுப்பதற்காகவே இந்தப் பிளாஸ்டிக் கூடைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதாகவும், ஆனால், அந்தப் பிளாஸ்டிக் கூடைகள் மிகவும் செலவு மிக்கவை என்றும் அவற்றை லாறிகளில் ஏற்றும் போது அவை அதிக இடத்தை பிடிப்பதாகவும் கூறும் விவசாயிகள் அவற்றை ஏற்க மறுப்பதாகவும் அந்தச் செய்தியாளர் கூறினார்.
11ம் திகதி நள்ளிரவு முதல் மரக்கறி, பழங்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்வது கட்டாயம்
வெளி இடங்களில் இருந்து மரக்கறி மற்றும்
பழங்கள் ஏற்றிச் செல்லப்படும் போது அவற்றை பிளாஸ்டிக் பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி
ஏற்றிச் செல்வது எதிர்வரும் 11ம் திகதி நள்ளிரவு 12 மணியிலிருந்து
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
மரக்கறி மற்றும் பழங்கள் பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காலத்திற்கு வர்த்தகர்கள் அதனை பழக்கத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தண்டனைகள் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் 11ம் திகதிக்குப் பின் விதிமுறைகளை மீறினால் கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
Read
more
இதனை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
மரக்கறி மற்றும் பழங்கள் பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காலத்திற்கு வர்த்தகர்கள் அதனை பழக்கத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தண்டனைகள் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் 11ம் திகதிக்குப் பின் விதிமுறைகளை மீறினால் கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில்
கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து
வளர்ப்பதாகும்.
இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும், 15 அடி உயரமும் உள்ள கொட்டகை அமைத்தல் நன்று.
பயன்கள்: விவசாய நிலமற்றோரும் ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கையாண்டால் அதிக எடையுடைய குட்டிகளை பெறமுடியும்.
மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள இடங்களில் 4-5 மணி நேர மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகைகளில் அடைத்து பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுத்து பராமரிப்பதாகும்.
பயன்கள்: இம்முறையில் ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சி அடைந்து அதிக எடையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளரும் ஆட்டின் வளர்ச்சியைவிட 3-4 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இம்முறையில் வளரும் ஆடுகளில் இருந்து 49 விழுக்காடு இறைச்சி கிடைக்கும்.
தீவிர முறை (உயர் மட்ட தரை முறை): இம்முறையில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சல்லடைத்தரையை மரப்பலகையிலோ அல்லது கம்பிகளிலோ கட்டவேண்டும். இரு பலகைகளுக்கிøடேய உள்ள இடைவெளி 2 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் 3 அடி பள்ளத்தில் விழுந்துவிடும். இதன்மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழிவகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால்
ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். ஆடு இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போடுகின்றன. 1 தடவை 2 குட்டிகள் போடும். அதன்படி 2 வருடத்திற்கு 6 குட்டிகள், 1 ஆண்டுக்கு 3 குட்டிகள்.
Read more
இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும், 15 அடி உயரமும் உள்ள கொட்டகை அமைத்தல் நன்று.
பயன்கள்: விவசாய நிலமற்றோரும் ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கையாண்டால் அதிக எடையுடைய குட்டிகளை பெறமுடியும்.
மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள இடங்களில் 4-5 மணி நேர மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகைகளில் அடைத்து பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுத்து பராமரிப்பதாகும்.
பயன்கள்: இம்முறையில் ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சி அடைந்து அதிக எடையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளரும் ஆட்டின் வளர்ச்சியைவிட 3-4 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இம்முறையில் வளரும் ஆடுகளில் இருந்து 49 விழுக்காடு இறைச்சி கிடைக்கும்.
தீவிர முறை (உயர் மட்ட தரை முறை): இம்முறையில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சல்லடைத்தரையை மரப்பலகையிலோ அல்லது கம்பிகளிலோ கட்டவேண்டும். இரு பலகைகளுக்கிøடேய உள்ள இடைவெளி 2 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் 3 அடி பள்ளத்தில் விழுந்துவிடும். இதன்மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழிவகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால்
ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். ஆடு இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போடுகின்றன. 1 தடவை 2 குட்டிகள் போடும். அதன்படி 2 வருடத்திற்கு 6 குட்டிகள், 1 ஆண்டுக்கு 3 குட்டிகள்.
நுண்ணுயிர் சத்து வழங்கும் சணல் பயிர் மண்ணின் மலட்டுத்தன்மை நீக்க உதவி
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
பயிருக்கு தேவையான நுண்ணுயிர் சத்து சணலை
பயிரிடுவதால் மண் தரமானதாக ஆவதுடன் பயிர் செழித்து வளர
துணைபுரிகிறது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் கோடையில் தெளிக்கப்பட்ட சணல் விதை தற்போது வளர்ந்து, தண்ணீர் வந்ததும் அதை மடக்கி உழவு செய்யும் பணி நடக்கிறது. சணலை தெளித்து பயிரிட்டு, அதை தண்ணீர் வந்ததும் மடக்கி உழுவதால் மண் தரமானதாகவும், பயிர் செழித்து வளரவும் துணை புரிவதுடன், பயிருக்கு முக்கிய தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தருகிறது. இதனால், தண்ணீர் சிறிதளவு வைத்தாலும் அதை தேக்கி வைத்துக் கொள்வதுடன், மண் இறுகாமல் இருக்க தேவையான வேலைகளை செய்கிறது.
மேலும், பயிர் செழுமையாக, பசுந்தன்மையுடன் வளர அதிக அளவில் இது துணை புரிகிறது. இதனால், மண் மலடாவது குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணல் விதை தேவைப்படும். இதற்கான செலவு 2000 ரூபாயாகும். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இதை பயன்படுத்துவதால் கடந்த பல ஆண்டாக ரசாயன உரங்களைப்போட்டு பயிரிடப்பட்ட விளை நிலங்களின் மண் தரம் மாறுவதுடன், பயிருக்குத்தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தரும்.இதை விவசாயிகள் கோடையில் தெளித்து பயன்பெறலாம்.
Read more
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் கோடையில் தெளிக்கப்பட்ட சணல் விதை தற்போது வளர்ந்து, தண்ணீர் வந்ததும் அதை மடக்கி உழவு செய்யும் பணி நடக்கிறது. சணலை தெளித்து பயிரிட்டு, அதை தண்ணீர் வந்ததும் மடக்கி உழுவதால் மண் தரமானதாகவும், பயிர் செழித்து வளரவும் துணை புரிவதுடன், பயிருக்கு முக்கிய தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தருகிறது. இதனால், தண்ணீர் சிறிதளவு வைத்தாலும் அதை தேக்கி வைத்துக் கொள்வதுடன், மண் இறுகாமல் இருக்க தேவையான வேலைகளை செய்கிறது.
மேலும், பயிர் செழுமையாக, பசுந்தன்மையுடன் வளர அதிக அளவில் இது துணை புரிகிறது. இதனால், மண் மலடாவது குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணல் விதை தேவைப்படும். இதற்கான செலவு 2000 ரூபாயாகும். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இதை பயன்படுத்துவதால் கடந்த பல ஆண்டாக ரசாயன உரங்களைப்போட்டு பயிரிடப்பட்ட விளை நிலங்களின் மண் தரம் மாறுவதுடன், பயிருக்குத்தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தரும்.இதை விவசாயிகள் கோடையில் தெளித்து பயன்பெறலாம்.
சளியைக் குணப்படுத்தும் வாசனை பொருட்கள்
மஞ்சள்: விரலிமஞ்சள் ஒன்றை எடுத்து அதன் நுனிபாகத்தை நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை மூக்கினால் நுகர்ந்துவர சளித்தொல்லை முற்றிலும் குணமாகும். காலையில் ஒரு முறையும், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒருமுறையும் இவ்வாறு நுகர வேண்டும். இதனை இயற்கை இன்ஹேலர் என்று சொல்லலாம். இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிறிது மஞ்சள்தூள், பொடித்த பனங்கற்கண்டு கலந்து பருகிவர சளி நன்கு பழுத்து கபம் வெளிப்பட்டு நலன் பயக்கும்.
மிளகு: மிளகுத்தூளை தீக்கனலில் தூவி வரும் புகையை மெல்ல நுகர்ந்துவர சளித்தொல்லை குணமாகும். தினம் இரவில் மட்டும் இதைக் கடைபிடிக்க வேண்டும். சூடான சாதத்தில் மிளகு ரசம் தயாரித்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை போய்விடும். இப்படி சாப்பிடும்போது சாதத்தில் தயிர் ஊற்றி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுக்கு: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப சுக்கு சளியை ஓட்டும். போதிய அளவு நீரில் சிறிது சுக்கைப் பொடித்து போட்டு, கருப்பட்டி சேர்த்து, சுக்குநீர் கொதிக்கவைத்து இறக்கிவைத்து, அதைச் சுடச்சுட குடித்துவர சளித்தொல்லை நீங்கும். இது ஒரு எளிய இயற்கை மருந்தாகும். சுக்கைத் தூளாக்கி சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டுவர சளி குணமாகும்.
இலங்கையில் சார்க் வலய விவசாய விதை வங்கி
சார்க் வலய நாடுகளுக்கான சர்வதேச தரத்திலான
விவசாய விதை வங்கி ஒன்றை இலங்கையில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை இதற்கான தீர்மானத்தை எடுத்தள்ளது.
மாலைத்தீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட நான்கு உடன்படிக்கைகளின் ஒன்றுக்கு அமைவாக இந்த விதை வங்கி நிருவப்பட உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மற்றும் வலய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்றவற்றின் அடிப்படையில் வலயத்தில் நிலவும் விவசாய பயிர்ச் செய்கை விதைகளுக்கான தட்டுப்பாட்டை இனங்கண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படுகின்றது.
Read more
விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை இதற்கான தீர்மானத்தை எடுத்தள்ளது.
மாலைத்தீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட நான்கு உடன்படிக்கைகளின் ஒன்றுக்கு அமைவாக இந்த விதை வங்கி நிருவப்பட உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மற்றும் வலய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்றவற்றின் அடிப்படையில் வலயத்தில் நிலவும் விவசாய பயிர்ச் செய்கை விதைகளுக்கான தட்டுப்பாட்டை இனங்கண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படுகின்றது.
மிளகாய் சாகுபடி
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய்
பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப்
பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற
பருவங்கள். ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை
தேவைப்படும்.
மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.
நாற்றங்கால்: நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும். நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடு வதற்கு 40 முதல் 44 நாட்கள் வயது டைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.
நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30 து 15 செ.மீ. இடைவெளி யில் நடவு செய்ய வேண்டும்.
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70, 100 மற்றும் 130வது நாள் நடவுப்பயிரில் நட்ட 30, 60, 90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர் பாய்ச்ச வேண்டும்.
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லிகிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்: ஒரு எக்டருக்கு-210-240 நாட்களில், வற்றல்- 2-3 டன், பச்சைமிளகாய்-10-15 டன்
Read more
மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.
நாற்றங்கால்: நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும். நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடு வதற்கு 40 முதல் 44 நாட்கள் வயது டைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.
நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30 து 15 செ.மீ. இடைவெளி யில் நடவு செய்ய வேண்டும்.
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70, 100 மற்றும் 130வது நாள் நடவுப்பயிரில் நட்ட 30, 60, 90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர் பாய்ச்ச வேண்டும்.
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லிகிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்: ஒரு எக்டருக்கு-210-240 நாட்களில், வற்றல்- 2-3 டன், பச்சைமிளகாய்-10-15 டன்
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
வாழைக்கு நுண்ணூட்டத்தின்
அவசியம்:வாழைக்கு பெயர்போனது யாழ்ப்பாணம் அதிக வருமாணத்தை எமது விவசாயிகளுக்கு வாழை
தருவதை மறுக்க முடியாது . வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும்,
தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான
விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில்
குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன
உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற
காரணங்களினால் தற்போது நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள் விவசாயத்தில்
மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
மண்வளம் பாதிக்கப்படுவது, போதிய வேர் வளர்ச்சியின்மை, பாஸ்பரஸ்(P) உரங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங் களினால் நுண்ணூட்டச் சத்தை மண்ணில் இட்டு நிவர்த்தி செய்வது கடினமானதாகும். மண்ணில் இடப்பட்ட நுண்ணூட்டச் சத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்கப்படுகிறது. எனவே விளைச்சல் மற்றும் தரத்தை அதிகப் படுத்துவதற்காக நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழி தெளித்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தில் மிக முக்கியமான அங்கமாகும்.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகின்றது.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தெளிப்பதால் உண்டாகும் பயன்கள்: * நுண்ணூட்டக் குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. * உரத்தின் பயன்பாடு குறைகிறது. * பயிரின் வளர்ச்சி துரிதப் படுத்தப்படுகிறது. * நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.
கலவையில் உள்ள முக்கிய நுண்ணூட்டங்கள்: துத்தநாகம்-3%, போரான்-1.5%, மாங்கனீஸ்-1%, இரும்பு-1.5%.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: * வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு சாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். *வாழை நட்ட 5வது, 6வது, 7வது, 8வது, 9வது மற்றும் 10வது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.
* வாழை குலை தள்ளிய பின் முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும். * இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக் கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக் கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்கக் கூடாது.
* வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை தயாரித்ததுடன் தெளிக்க வேண்டும். * இந்த நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது. * இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். யாழ்ப்பாண விவசாயிகளுக்கும் இப்படியான உரங்களை வழங்குவதன் மூலம் வாழை வருமானத்தை பெருக்கலாம்
மண்வளம் பாதிக்கப்படுவது, போதிய வேர் வளர்ச்சியின்மை, பாஸ்பரஸ்(P) உரங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங் களினால் நுண்ணூட்டச் சத்தை மண்ணில் இட்டு நிவர்த்தி செய்வது கடினமானதாகும். மண்ணில் இடப்பட்ட நுண்ணூட்டச் சத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்கப்படுகிறது. எனவே விளைச்சல் மற்றும் தரத்தை அதிகப் படுத்துவதற்காக நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழி தெளித்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தில் மிக முக்கியமான அங்கமாகும்.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகின்றது.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தெளிப்பதால் உண்டாகும் பயன்கள்: * நுண்ணூட்டக் குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. * உரத்தின் பயன்பாடு குறைகிறது. * பயிரின் வளர்ச்சி துரிதப் படுத்தப்படுகிறது. * நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.
கலவையில் உள்ள முக்கிய நுண்ணூட்டங்கள்: துத்தநாகம்-3%, போரான்-1.5%, மாங்கனீஸ்-1%, இரும்பு-1.5%.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: * வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு சாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். *வாழை நட்ட 5வது, 6வது, 7வது, 8வது, 9வது மற்றும் 10வது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.
* வாழை குலை தள்ளிய பின் முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும். * இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக் கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக் கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்கக் கூடாது.
* வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை தயாரித்ததுடன் தெளிக்க வேண்டும். * இந்த நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது. * இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். யாழ்ப்பாண விவசாயிகளுக்கும் இப்படியான உரங்களை வழங்குவதன் மூலம் வாழை வருமானத்தை பெருக்கலாம்
ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப
உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளது.
அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கினை
விளைவிக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் முதல் கடுகு வரை
ஒவ்வொன்றையும் விளைவிக்க நாம் பயன்படுத்தும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களே
நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ரசாயன உரங்களின்
விலையும் இப்பொழுது வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த
நாடுகளில் இயற்கை உரங்கள் இட்டு உற்பத்தி செய்த காய்கறிகளை அதிக விலைகொடுத்து
வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், செயற்கை உரம்
உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதுதானே. இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் போக்க
இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம்தான் ஆட்டு எருவாகும்.
ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. "ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Read more
ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. "ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சிப்பி காளான் வளர்ப்பு
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
செய்யும் தொழிலே தெய்வம்
என்பார்கள். நாம் முன்னேற வேண்டுமானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள்
இருக்கிறது. அதிலும் சுயமாக முன்னேற நினைப்பவர்களுக்கு உதவுபவை சிறுதொழில்கள். அதிக
முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க இத்தகைய சிறுதொழில்களே மிகவும்
சிறந்தவையாக இருக்கிறது. பாருங்கள்! சிறுதொழில் செய்து இப்போது நாட்டில் பலரும்
பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். அதைப்போன்றே இந்த காளான் வளர்ப்பு தொழிலும்..! ஆம் நண்பர்களே. சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்கலாம். சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் கீழே..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் நம்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் 60 ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான்500ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். அதைப்போன்றே இந்த காளான் வளர்ப்பு தொழிலும்..! ஆம் நண்பர்களே. சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்கலாம். சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் கீழே..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் நம்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் 60 ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான்500ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
இயற்கை முறை கறிப்பலா சாகுபடி : நவீன தொழில்நுட்பம்
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
இதனுடைய பழங்கள் 25 சதம் மாவுச்சத்தும்,
கால்சியம், வைட்டமின் ஏ, பி, போதுமான அளவிலும் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இதனை
"பிரெட் புரூட்' என்று அழைத்தனர். தென்னிந்தியாவில் இப்பழம் சமையலுக்கு
பயன்படுகிறது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். மண், தட்பவெப்ப நிலை: மேற்கு
கடற்கரை ஓரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கீழ்பழநிமலை, வயநாடு,
குற்றாலம், ஆனைமலை பகுதிகளில் காணப்படுகிறது. கரிமச்சத்து நிறைந்த செம்பொறை மண்
ஏற்றது. காற்றின் ஈரப்பதம் மிகுந்தும், சூடான தட்பவெப்பமும் இதன் வளர்ச்சிக்கு
ஏற்றது. ஆண்டு மழையளவு 2000-2500 மி.மீ. உள்ள இடங்களில் நன்கு
வளர்கிறது.
வகைகள்: 1. விதையுள்ளது, 2. விதைஅற்றது. விதையுள்ள வகைகள் சமையலுக்கு ஏற்றதல்ல. விதைகளை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடலாம். விதையற்ற வகைகளே பொதுவாக சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா வகைகள் 20 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. விட்டம் கொண்ட வேர்த்தண்டுகள் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்த்தண்டுகளை செங்குத்தாக இல்லாமல் படுக்கை முறையில் நடவு செய்ய வேண்டும். நடவின்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.
நீர்பாசனம்: நடவு செய்த முதல் 2 மாதங்களுக்கு தினமும் 8-10 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு 2 வருடம் வரை 10-20 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.
உரமிடுதல்: வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கியதொழு உரம் இட்டால் போதுமானது.
பின்செய் நேர்த்தி: களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். மரத்தின் அருகே ஆழமாக செலுத்தினால் வேர்கள் பாதிக்கப்படும். ஊடுபயிர்: காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக இஞ்சி, மிளகு, வெனிலா ஆகியவற்றை பயிரிடலாம்.
நோய்: பழங்களைத் தாக்கும் மென்மையழுகல் நோயானது பழங்களை அழுகச் செய்து மரத்திலிருந்து உதிரச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தசகவ்யா என்ற இயற்கை கலவையை தெளிக்க வேண்டும்.
அறுவடை: நடவு செய்த 5 முதல் 6 வருடங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்பிடிப்பை அதிகரிக்க கையால் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 10 மணி வரை பூவடிச் செதிலிலிருந்து பெண் மஞ்சரியானது விரிகிறது. அதிலுள்ள ஒவ்வொரு பூக்களும் படிப்படியாக திறக்க 72 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.
ஒரு ஆண் மஞ்சரியை ஒரு பெண் மஞ்சரியின் அருகே எடுத்துச் சென்று மகரந்தத்தைப் பெண் மஞ்சரியின் சூல்முடியின்மீது வைத்து மென்மையாகத் தேய்க்க வேண்டும். பெண் பூ திறந்த 3 நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்துவிட வேண்டும். பெண் மஞ்சரியில் உள்ள அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் திறப்பதில்லை. எனவே மகரந்தச் சேர்க்கையை திரும்பவும் 4 முதல் 5 நாட்களுக்குத் தினமும் செய்துவர வேண்டும். மஞ்சரி விரிந்த 60 முதல் 90 நாட்களில் காய்கள் கிடைக்கின்றன. பழத்தின் நிறமானது பச்சையிலிருந்து மஞ்சள் கலந்த பச்சையாக மாறும்போது பழம் முதிர்ச்சி அடைகிறது. பழங்களை பழுப்பதற்கு முன் அறுவடை செய்தால் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு மரமானது ஒரு வருடத்தில் 50-100 பழங்கள் (25-50 கிலோ) வரை கொடுக்கிறது. நீளமான கம்புடன் கூடிய கொக்கியைக் கொண்டு பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு கிலோ பழத்தின் விலை சராசரியாக ரூ.10 என்று எடுத்துக்கொண்டால் ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.250முதல் ரூ.500 வரை மொத்த வருமானமாகப் பெறலாம்.
Read more
வகைகள்: 1. விதையுள்ளது, 2. விதைஅற்றது. விதையுள்ள வகைகள் சமையலுக்கு ஏற்றதல்ல. விதைகளை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடலாம். விதையற்ற வகைகளே பொதுவாக சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா வகைகள் 20 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. விட்டம் கொண்ட வேர்த்தண்டுகள் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்த்தண்டுகளை செங்குத்தாக இல்லாமல் படுக்கை முறையில் நடவு செய்ய வேண்டும். நடவின்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.
நீர்பாசனம்: நடவு செய்த முதல் 2 மாதங்களுக்கு தினமும் 8-10 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு 2 வருடம் வரை 10-20 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.
உரமிடுதல்: வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கியதொழு உரம் இட்டால் போதுமானது.
பின்செய் நேர்த்தி: களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். மரத்தின் அருகே ஆழமாக செலுத்தினால் வேர்கள் பாதிக்கப்படும். ஊடுபயிர்: காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக இஞ்சி, மிளகு, வெனிலா ஆகியவற்றை பயிரிடலாம்.
நோய்: பழங்களைத் தாக்கும் மென்மையழுகல் நோயானது பழங்களை அழுகச் செய்து மரத்திலிருந்து உதிரச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தசகவ்யா என்ற இயற்கை கலவையை தெளிக்க வேண்டும்.
அறுவடை: நடவு செய்த 5 முதல் 6 வருடங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்பிடிப்பை அதிகரிக்க கையால் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 10 மணி வரை பூவடிச் செதிலிலிருந்து பெண் மஞ்சரியானது விரிகிறது. அதிலுள்ள ஒவ்வொரு பூக்களும் படிப்படியாக திறக்க 72 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.
ஒரு ஆண் மஞ்சரியை ஒரு பெண் மஞ்சரியின் அருகே எடுத்துச் சென்று மகரந்தத்தைப் பெண் மஞ்சரியின் சூல்முடியின்மீது வைத்து மென்மையாகத் தேய்க்க வேண்டும். பெண் பூ திறந்த 3 நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்துவிட வேண்டும். பெண் மஞ்சரியில் உள்ள அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் திறப்பதில்லை. எனவே மகரந்தச் சேர்க்கையை திரும்பவும் 4 முதல் 5 நாட்களுக்குத் தினமும் செய்துவர வேண்டும். மஞ்சரி விரிந்த 60 முதல் 90 நாட்களில் காய்கள் கிடைக்கின்றன. பழத்தின் நிறமானது பச்சையிலிருந்து மஞ்சள் கலந்த பச்சையாக மாறும்போது பழம் முதிர்ச்சி அடைகிறது. பழங்களை பழுப்பதற்கு முன் அறுவடை செய்தால் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு மரமானது ஒரு வருடத்தில் 50-100 பழங்கள் (25-50 கிலோ) வரை கொடுக்கிறது. நீளமான கம்புடன் கூடிய கொக்கியைக் கொண்டு பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு கிலோ பழத்தின் விலை சராசரியாக ரூ.10 என்று எடுத்துக்கொண்டால் ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.250முதல் ரூ.500 வரை மொத்த வருமானமாகப் பெறலாம்.
விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்னை
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது
தழைச்சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரசும், சாம்பல் சத்து
எனப்படும் பொட்டாஷ் சத்தும் ஆகும். உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல்
உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச்சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அது மட்டுமின்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது. தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப் படி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச்சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல, தற்போது உற்பத்தியாகும் மணிச்சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணிச்சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுப்பாடு காலங்களில் சீனா மணிச்சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணிச்சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றிவிடும் அபாயநிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச்சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு மணிச்சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வுதான் என்ன?: 1. முடிந்த அளவு மணிச்சத்தை தற்போதிலிருந்தே சாணம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2. தேவையற்ற மணிச்சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச்சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணிச்சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச்சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
3. மண்ணில் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து, மணிச்சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் மணிச்சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போ பாக்டீரியா என்று அழைக்கிறோம். ஆனால் இவை மண்ணில் இருக்கும் பயிர்களால் எடுக்க முடியாத மணிச்சத்தைதான் பயிருக்கு எடுக்க உதவும்.
4. மணிச்சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சலை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மனித கழிவுகளில்தான் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. எனவே நகர்ப்புற மனித கழிவுகளிலிருந்து மணிச்சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணெய் வளம் குறைந்தால்கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச்சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வருங்கால சந்ததியரின் உணவுத்தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது. இந்த பிரச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை
Read more
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச்சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அது மட்டுமின்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது. தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப் படி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச்சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல, தற்போது உற்பத்தியாகும் மணிச்சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணிச்சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுப்பாடு காலங்களில் சீனா மணிச்சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணிச்சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றிவிடும் அபாயநிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச்சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு மணிச்சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வுதான் என்ன?: 1. முடிந்த அளவு மணிச்சத்தை தற்போதிலிருந்தே சாணம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2. தேவையற்ற மணிச்சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச்சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணிச்சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச்சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
3. மண்ணில் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து, மணிச்சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் மணிச்சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போ பாக்டீரியா என்று அழைக்கிறோம். ஆனால் இவை மண்ணில் இருக்கும் பயிர்களால் எடுக்க முடியாத மணிச்சத்தைதான் பயிருக்கு எடுக்க உதவும்.
4. மணிச்சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சலை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மனித கழிவுகளில்தான் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. எனவே நகர்ப்புற மனித கழிவுகளிலிருந்து மணிச்சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணெய் வளம் குறைந்தால்கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச்சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வருங்கால சந்ததியரின் உணவுத்தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது. இந்த பிரச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை
வில்வேகம் - உயிர்ம பூச்சிக்கொல்லி
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி
ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இது இயல்பாக வளர்ந்து
காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று
விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக,
ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இலை களில் இருந்து
பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை
கட்டுப் படுத்த வல்லவை. இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக்
காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை
கொண்டுள்ளது. இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன. பின்னர் இதனை ஆய்வகம் மற்றும் நாற்றங்கால்களிலும் சோதிக்கப் பட்டது. அதற்குப்பிறகு தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தனித்தனியே புறச்சோதனைகள் செய்யப்பட்டன. இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது. குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை. சராசரியாக இலையுண்ணிகளால் ஏற்படும் சேதாரம் ஒரு மரத்திற்கு 5.23 கன அடி என கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த வெட்டு மர அளவில் 30-40'' இழப்பு ஏற்படுத்தக் கூடியது. எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும். இந்நிலையில் இந்நிறுவனத்தில் வில்வ உயிர்ம பூச்சிக்கொல்லி கண்டறியப்பட்டது இதற்கு ஒரு வரமாக வாய்க்கப் பெற்றுள்ளது.
வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன. பின்னர் இதனை ஆய்வகம் மற்றும் நாற்றங்கால்களிலும் சோதிக்கப் பட்டது. அதற்குப்பிறகு தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தனித்தனியே புறச்சோதனைகள் செய்யப்பட்டன. இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது. குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை. சராசரியாக இலையுண்ணிகளால் ஏற்படும் சேதாரம் ஒரு மரத்திற்கு 5.23 கன அடி என கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த வெட்டு மர அளவில் 30-40'' இழப்பு ஏற்படுத்தக் கூடியது. எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும். இந்நிலையில் இந்நிறுவனத்தில் வில்வ உயிர்ம பூச்சிக்கொல்லி கண்டறியப்பட்டது இதற்கு ஒரு வரமாக வாய்க்கப் பெற்றுள்ளது.
சம்பா/பாசனப்பருவ நெல் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
நெல் பயிரினை குலைநோய், பழுப்பு, இலைப்புள்ளி
நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், ஊதுபத்தி
நோய், நெல்மணி நிறமாற்ற நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவை விதைகள்
மூலமாகவும் பரவுகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம்
தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து சாதகமான
சூழ்நிலையில் நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.
எப்படி: நெல் விதைகளை ஊறவைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்தவுடன் நீரில் ஊறவைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன் டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப்பெயர் பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்தி ருந்து பின்னர் வழக்கம் போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும்.
Read more
எப்படி: நெல் விதைகளை ஊறவைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்தவுடன் நீரில் ஊறவைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன் டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப்பெயர் பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்தி ருந்து பின்னர் வழக்கம் போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும்.
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
1. நோய் தாக்கப்பட்டு மடிந்த
மரம்; 2. தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம்;
3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை உள்ள கீழ்ப்பழநி மலை, சிறுமலை, கொல்லிமலை மற்றும் கல்ராயன்மலை ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழ்ப்பழநிமலை மற்றும் சிறுமலை பகுதிகளில் இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.
3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை உள்ள கீழ்ப்பழநி மலை, சிறுமலை, கொல்லிமலை மற்றும் கல்ராயன்மலை ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழ்ப்பழநிமலை மற்றும் சிறுமலை பகுதிகளில் இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.
வான்கோழி வளர்ப்பு
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்புமுறைகளை
கடைபிடிக்கலாம்.
1. புறக்கடை வளர்ப்பு, 2. மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, 3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, 4. கம்பிவலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்.
இனங்கள்: அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்: இவ்வகை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெட்டைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை, பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடம்இருந்து பிரித்து வளர்க்கப் பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.
அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி: இந்த ரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12-18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 - 9 கிலோ எடை வரையிலும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 - 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை: அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப் பட்டன. இவ்வகை வான் கோழிகள் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும் வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.
வான்கோழித் தீவனப் பராமரிப்பு: வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெறமுடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடை கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாட்களுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5 - 3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு: தண்ணீர், மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்).
ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான் கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்ற கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம்.
1. புறக்கடை வளர்ப்பு, 2. மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, 3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, 4. கம்பிவலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்.
இனங்கள்: அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்: இவ்வகை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெட்டைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை, பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடம்இருந்து பிரித்து வளர்க்கப் பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.
அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி: இந்த ரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12-18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 - 9 கிலோ எடை வரையிலும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 - 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை: அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப் பட்டன. இவ்வகை வான் கோழிகள் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும் வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.
வான்கோழித் தீவனப் பராமரிப்பு: வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெறமுடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடை கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாட்களுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5 - 3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு: தண்ணீர், மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்).
ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான் கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்ற கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம்.
பிள்ளைகளை நம்பி என்னால வாழ முடியாது! விவசாயத் தாயின் விருப்பம் இது!! (படங்கள் இணைப்பு)
அது யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடி.
இறுவாட்டு மண்ணில் வெங்காய அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.
முதியவர் ஒருவரின் கண்காணிப்பின்கீழ் ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். அந்தி மங்குவதற்குள் அறுவடையை முடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோள் கண்களில் தெரிந்தது.

வாகன இரைச்சலைக்கூடப் பொருட் படுத்தாது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் வேளை. கடுமை யான உழைப்பில் களைத்துப்போன பவளம் (64) தன் கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

முகச்சுருக்கம் வயதின் முதுமையைக் காட்ட, காதோரம் வழிந்தோடிய வியர்வை அன்றைய நாளின் பாரமான பொழுதுகளை நினைவூட்டின. பவளம் சிறுவயதிலிருந்தே விவசாய கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நாளொன்றுக்கு ஏழு ரூபா சம்பளம் வாங்கிய காலம் முதல் எழுநூற்று ஐம்பது ரூபா சம்பளம் வாங்கும் காலம் வரை மண்ணோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

வறிய குடும்பமொன்றில் பிறந்ததாகவும் ஆரம்பகாலம் தொட்டே கூலித்தொழில் செய்துவருவதாகவும் எம்மோடு பேசத்தொடங்கினார். "மண்ணோடு மண்ணாகிப்போகும் வரை இந்த மண்ணை நம்பித்தான் வாழ்ந்து வருகிறேன்.
விடிஞ்சதும் தோட்ட வேலை, இருட்ட வீட்டு வேலை என எனது காலம் போகுது. எனக்குப் பிள்ளைகள் இருக்கினம். அவையளை நம்பி என்னால இருக்க முடியாது.

பிள்ளையளும் கூலித்தொழில் தான் செய்யினம். எனக்கெண்டு எனது தேவைகளைச் செய்ய வருமானம் தேவை. அத்துடன் இவ்வளவு நாளும் உழைச்சுப்போட்டு சில மணி நேரம் ஓய்வெடுப்பதற்குக் கூட மனம் இடங் கொடாது.
இப்ப நாளொண்டுக்கு 600 ரூபா கிடைக்கிது. வேலை குறைவான நேரங்களில் இதை விடக் கூலியும் குறைவு. தோட்ட வேலைகள் எதுவுமில்லாமல் வாழ்ந்த காலமும் உள்ளது.
அப்பிடி இருந்த காலத்தில இந்த மண்ணப் பாத்து கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறன். என்னைக் காக்கும் இந்தக் கடவுள் கூட எதிரியாய்த் தெரிந்த காலம் அது. இப்போதும் வறுமை தான்.

என்ர பிள்ளைகளுடன் தான் நானும் ஒண்டாய் இருக்கிறன். வீட்டுத் தேவைக் கான செலவுகள் அதிகம். இப்போ எனக்குக் கிடைக்கும் வருமானம் ஓரளவுக்குப் போதுமானது.
ஏண்டாலும் வேறு ஏதும் தேவைகள் ஏற்படும்போது சமாளிக்க ஏலாமல் போகும். அவ்வாறான நாட்களில எங்களுக்கு வேலை தருவோரிடம் பணம் பெற்றுக்கொள்வேன்.
அந்தப் பணத்துக்காக அவர்களின் தோட்டத்தில வேலையைச் செய்து காசைக்கழிச்சுப் போடுவன். இந்த மண் வளமானது. ஒவ்வொரு அறு வடையின்போதும் அறுவடை காய்கறிகளை தங்கத்தைப் பாதுகாப்பது போலத்தான் பாதுகாப்பம்.
என்னதான் நாங்கள் வறுமையில் பட்டினியோட இருந்தாலும் மற்றோருக்கு உணவு கொடுக்கிறோமே என்ற சந்தோஷமும் திருப்தியும் தான் எங்களை ஆறுதலாய் வாழ வைக்கிறது'எனக் கூறி முடித்தார்.

கவலை தோய்ந்த அவரது முகம் இறுதி வார்த்தைகளைக் கூறும் போது மலர்ச்சி கண்டிருந்தது. எங்கோ ஒரு பகுதியில் உற்பத்தியான விவசாயப் பொருட்களை மற்றுமொரு பகுதி மக்கள் உண்டு மகிழ்கிறார்கள்.
ஆனால் அந்த உழைப்பாளியின் உழைப்பின் உன்னதத்தை வார்த்தைகளில் கூறி விட முடியாது. பவளம் போன்று அங்கு கூலித்தொழில் ஈடுபட்டிருந்த சின்னம்மா (வயது 70), சித்திரம் (வயது 62), சின்னத்தங்காயி (வயது 50) ஆகியோரும் தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் தனித்தனியான சோகம் ததும்பிய நெஞ்சை நெருடும் கண்ணீர்க் கதைகள். மண்ணைப்பற்றியும் காலநிலையைப் பற்றியும் அனைத்தையுமே தெரிந்துவைத் திருக்கிறார்கள்.
இறுவாட்டு மண்ணில் விளையும் விவசாய உற்பத்திகள், கால எல்லை, நீர்ப்பசையைக் கண்டு பிடித்தல், விளைச்சலை முன் கூட்டியே அறிதல் என எல்லாவற்றிலும் அனுபவத்தின் முதுமை யால் சிறப்புத் தேர்ச்சியடைந் திருக்கிறார்கள்.
"இதெல்லாம் பள்ளிக்கூடம்“ போய் படிச்சது இல்ல. பரம்பரை பரம்பரையா எங்கட ஆட்கள் சொல்லிக்கொடுத்தது' என்கிறார் சின்னம்மா. "பஞ்சபூதங்களை நம்பி வாழ்கிறோம். கடவுள் கைவிட மாட்டார்' என்ற நம்பிக்கையோடு பேசுகிறார் சித்திரம்.
மிளகாய், வெங்காயம்,புகையிலை, மரவள்ளி என காலத்துக்குக் காலம் பயிரிட்டு உழைத்து வாழும் இவர்களுடைய வாழ்க்கை வித்தியாசமானது.
நாளைய நாளின் எதிர்பார்ப்புகளை விட இன்றைய நாளின் சந்தோஷத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தமிழர் பாரம்பரியத்தில் விவசாயிகளுக்குத் தனி மதிப்புண்டு.
ஆனால் இக்காலத்தில் விவசாயம் செய்வோரை தரக்குறைவாகப் பார்க்கும் நிலை காணப்படுவதாக இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
அதனை வெளிப்படையாகச் சொல்லா விடினும் மறைமுகமான கருத்துக் களிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
வளரும் சமுதாயத்தினர் இவ்வாறான உழைப்பாளிகளை அப்படி நினைப்பார்களாயின் அது மிகப்பெரிய தவறு என்பதை யாரும் சொல்லித் தெளிய வேண்டியதில்லை.
இவர்கள் பேசிய பல்வேறு விடயங்கள் வாழ்க்கையின் முதிர்ச்சியில் பெற்ற அனுபவத்தின் சிதறல்கள். அவை சிறந்த உதாரணங்களாய் அமைந்தன எனலாம்.
உழைத்து உழைத்து பண்பட்ட அந்த உழைப்பாளிகளுடன் சிலமணிநேரம் செலவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து நாம் திரும்பினோம்.
முதியவர் ஒருவரின் கண்காணிப்பின்கீழ் ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். அந்தி மங்குவதற்குள் அறுவடையை முடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோள் கண்களில் தெரிந்தது.
வாகன இரைச்சலைக்கூடப் பொருட் படுத்தாது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் வேளை. கடுமை யான உழைப்பில் களைத்துப்போன பவளம் (64) தன் கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.
முகச்சுருக்கம் வயதின் முதுமையைக் காட்ட, காதோரம் வழிந்தோடிய வியர்வை அன்றைய நாளின் பாரமான பொழுதுகளை நினைவூட்டின. பவளம் சிறுவயதிலிருந்தே விவசாய கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நாளொன்றுக்கு ஏழு ரூபா சம்பளம் வாங்கிய காலம் முதல் எழுநூற்று ஐம்பது ரூபா சம்பளம் வாங்கும் காலம் வரை மண்ணோடு போராடிக்கொண்டிருக்கிறார்.
வறிய குடும்பமொன்றில் பிறந்ததாகவும் ஆரம்பகாலம் தொட்டே கூலித்தொழில் செய்துவருவதாகவும் எம்மோடு பேசத்தொடங்கினார். "மண்ணோடு மண்ணாகிப்போகும் வரை இந்த மண்ணை நம்பித்தான் வாழ்ந்து வருகிறேன்.
விடிஞ்சதும் தோட்ட வேலை, இருட்ட வீட்டு வேலை என எனது காலம் போகுது. எனக்குப் பிள்ளைகள் இருக்கினம். அவையளை நம்பி என்னால இருக்க முடியாது.
பிள்ளையளும் கூலித்தொழில் தான் செய்யினம். எனக்கெண்டு எனது தேவைகளைச் செய்ய வருமானம் தேவை. அத்துடன் இவ்வளவு நாளும் உழைச்சுப்போட்டு சில மணி நேரம் ஓய்வெடுப்பதற்குக் கூட மனம் இடங் கொடாது.
இப்ப நாளொண்டுக்கு 600 ரூபா கிடைக்கிது. வேலை குறைவான நேரங்களில் இதை விடக் கூலியும் குறைவு. தோட்ட வேலைகள் எதுவுமில்லாமல் வாழ்ந்த காலமும் உள்ளது.
அப்பிடி இருந்த காலத்தில இந்த மண்ணப் பாத்து கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறன். என்னைக் காக்கும் இந்தக் கடவுள் கூட எதிரியாய்த் தெரிந்த காலம் அது. இப்போதும் வறுமை தான்.
என்ர பிள்ளைகளுடன் தான் நானும் ஒண்டாய் இருக்கிறன். வீட்டுத் தேவைக் கான செலவுகள் அதிகம். இப்போ எனக்குக் கிடைக்கும் வருமானம் ஓரளவுக்குப் போதுமானது.
ஏண்டாலும் வேறு ஏதும் தேவைகள் ஏற்படும்போது சமாளிக்க ஏலாமல் போகும். அவ்வாறான நாட்களில எங்களுக்கு வேலை தருவோரிடம் பணம் பெற்றுக்கொள்வேன்.
அந்தப் பணத்துக்காக அவர்களின் தோட்டத்தில வேலையைச் செய்து காசைக்கழிச்சுப் போடுவன். இந்த மண் வளமானது. ஒவ்வொரு அறு வடையின்போதும் அறுவடை காய்கறிகளை தங்கத்தைப் பாதுகாப்பது போலத்தான் பாதுகாப்பம்.
என்னதான் நாங்கள் வறுமையில் பட்டினியோட இருந்தாலும் மற்றோருக்கு உணவு கொடுக்கிறோமே என்ற சந்தோஷமும் திருப்தியும் தான் எங்களை ஆறுதலாய் வாழ வைக்கிறது'எனக் கூறி முடித்தார்.
கவலை தோய்ந்த அவரது முகம் இறுதி வார்த்தைகளைக் கூறும் போது மலர்ச்சி கண்டிருந்தது. எங்கோ ஒரு பகுதியில் உற்பத்தியான விவசாயப் பொருட்களை மற்றுமொரு பகுதி மக்கள் உண்டு மகிழ்கிறார்கள்.
ஆனால் அந்த உழைப்பாளியின் உழைப்பின் உன்னதத்தை வார்த்தைகளில் கூறி விட முடியாது. பவளம் போன்று அங்கு கூலித்தொழில் ஈடுபட்டிருந்த சின்னம்மா (வயது 70), சித்திரம் (வயது 62), சின்னத்தங்காயி (வயது 50) ஆகியோரும் தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் தனித்தனியான சோகம் ததும்பிய நெஞ்சை நெருடும் கண்ணீர்க் கதைகள். மண்ணைப்பற்றியும் காலநிலையைப் பற்றியும் அனைத்தையுமே தெரிந்துவைத் திருக்கிறார்கள்.
இறுவாட்டு மண்ணில் விளையும் விவசாய உற்பத்திகள், கால எல்லை, நீர்ப்பசையைக் கண்டு பிடித்தல், விளைச்சலை முன் கூட்டியே அறிதல் என எல்லாவற்றிலும் அனுபவத்தின் முதுமை யால் சிறப்புத் தேர்ச்சியடைந் திருக்கிறார்கள்.
"இதெல்லாம் பள்ளிக்கூடம்“ போய் படிச்சது இல்ல. பரம்பரை பரம்பரையா எங்கட ஆட்கள் சொல்லிக்கொடுத்தது' என்கிறார் சின்னம்மா. "பஞ்சபூதங்களை நம்பி வாழ்கிறோம். கடவுள் கைவிட மாட்டார்' என்ற நம்பிக்கையோடு பேசுகிறார் சித்திரம்.
மிளகாய், வெங்காயம்,புகையிலை, மரவள்ளி என காலத்துக்குக் காலம் பயிரிட்டு உழைத்து வாழும் இவர்களுடைய வாழ்க்கை வித்தியாசமானது.
நாளைய நாளின் எதிர்பார்ப்புகளை விட இன்றைய நாளின் சந்தோஷத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தமிழர் பாரம்பரியத்தில் விவசாயிகளுக்குத் தனி மதிப்புண்டு.
ஆனால் இக்காலத்தில் விவசாயம் செய்வோரை தரக்குறைவாகப் பார்க்கும் நிலை காணப்படுவதாக இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
அதனை வெளிப்படையாகச் சொல்லா விடினும் மறைமுகமான கருத்துக் களிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
வளரும் சமுதாயத்தினர் இவ்வாறான உழைப்பாளிகளை அப்படி நினைப்பார்களாயின் அது மிகப்பெரிய தவறு என்பதை யாரும் சொல்லித் தெளிய வேண்டியதில்லை.
இவர்கள் பேசிய பல்வேறு விடயங்கள் வாழ்க்கையின் முதிர்ச்சியில் பெற்ற அனுபவத்தின் சிதறல்கள். அவை சிறந்த உதாரணங்களாய் அமைந்தன எனலாம்.
உழைத்து உழைத்து பண்பட்ட அந்த உழைப்பாளிகளுடன் சிலமணிநேரம் செலவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து நாம் திரும்பினோம்.
தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
தென்னையின் மகசூல் குறைவிற்கு சத்துப்பற்றாக்குறை, பூச்சி
மற்றும் நோய் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்னையை காண்டாமிருக வண்டு,
சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோபைட் சிலந்திகள் தாக்கி மகசூல்
இழப்பு ஏற்படுகிறது.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.
தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
தொடர்பான இணைப்புக்கள்
விவசாயம்
தென்னையின் மகசூல் குறைவிற்கு சத்துப்பற்றாக்குறை, பூச்சி
மற்றும் நோய் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்னையை காண்டாமிருக வண்டு,
சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோபைட் சிலந்திகள் தாக்கி மகசூல்
இழப்பு ஏற்படுகிறது.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.
Subscribe to: Posts (Atom)
விவசாயம்
www.vivasaayi.com நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக